districts

img

ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் திறப்பு

கோவை, ஜன.8- மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தொகுதி வளர்ச்சி நிதி யிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட் டில் சுல்தான்பேட்டையில் புதிதாக கட் டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் திறப்பு  விழா நடைபெற்றது. முன்னாள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் 2023- 2024 ஆண்டு தொகுதி வளர்ச்சி நிதியிலி ருந்து திருப்பூர் ஒன்றியம் மங்கலம் ஊராட்சி சுல்தான்பேட்டையில் சமுதாய  நலக்கூடம் கட்ட ரூபாய் 50 லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்திருந்தார். இதன் கட்டு மானப்பணிகள் நிறைவுற்ற நிலையில், சமுதாய நலக்கூடம் திறப்பு விழா அண் மையில் நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு, மங்கலம் ஊராட்சி மன்றத்  தலைவர் எஸ்எம்பி மந்திராசலமூர்த்தி தலைமை வகித்தார். தமிழக அரசின்  வணிகவரி மற்றும் பத்திரதுறை அமைச் சர் மூர்த்தி திறந்து வைத்தார். இதில்,  மங்கலம் ஊராட்சி மன்ற உறுப்பினர்க ளும், அரசு அதிகாரிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும்  ஊர் பொதுமக்கள் என திரளாக பங் கேற்றனர்.