சேலம், நவ.9- தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் இருசக்கர வாக னத்தில் பயணித்த நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து சனியன்று காலை சென்று கொண்டிருந்தது. சங்ககிரி அருகே சென்ற போது, அவ்வழியாக சென்ற இருசக் கர வாகனத்தின் மீது மோதி பேருந்து கவிழ்ந்து விபத் துக்குள்ளானது. தொடர்ந்து பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகளும் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்ட னர். இதனிடையே, இருசக்கர வாகனத்தில் பயணித்த சின்ன கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப் பாளர் ராஜா மற்றும் சங்ககிரி காவல் துறையினர் மீட்புப்பணி யில் ஈடுபட்டனர். மேலும், இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.