districts

img

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் தட்டேந்த வேண்டியதுதான்!

செப்டம்பர் 7ஆம் தேதி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் வலியுறுத்தி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படு கிறது. இந்த நிலையில் திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் தினக்கூலி தொழிலாளர்கள் என பெண்கள், உள்ளிட்டவர்களிடம் விலைவாசி பற்றியும், வேலைவாய்ப்பு பற்றியும் கேட்ட போது. அவர்கள் கூறிய விபரம் வருமாறு:

அறிவானந்தம்

ஆரம்பத்தில் சொந்த மாக தொழில் செய்து வந் தேன். தொடர்ந்து நடத்த  முடியாமல் நெருக்கடி ஏற் பட்டது. எங்களுக்கு மாடு  உள்ளது. தற்போது பால் வியாபாரம் செய்து வருகி றேன். பால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் பால் ஊட்டுவ தற்கு மாதம் தோறும் பணம் தருவார்கள். ஆரம் பத்தில் முதல் ஒன்று இரண்டு தேதிகளில் பணம் கொடுத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது பலருக்கு வேலை இல்லை குடும்பத்தில் நெருக் கடி என்று பால் பணம் தருவதற்கு 10 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆகிவிடுகிறது. இது தான் இப்போது திருப்பூர் உள்ள நிலை.

டி.கிருஷ்ணவேணி

கடந்த ஆறு ஆண்டு காலமாக நான் செக்கிங் வேலை செய்து வருகி றேன். தற்போது வேலை யில்லை. மிகவும் நெருக் கடியாக உள்ளது. குடும்ப செலவுகளை சமாளிக்க முடியவில்லை. திருப்பூரில் வேலை நிலைமை மாறினால் தான் நாங்கள் சமாளிக்க முடியும். முன்பு குழு கடன் வாங்கினோம். வேலையில் லாமல் பணம் கட்ட முடியாத சூழ்நிலையில் இப் பொழுது குழு கடன் வாங்குவதில்லை.

எம்.கஸ்தூரி

நான் செட்டிங் வேலை செய்து வருகிறேன். ஆனால் இப்போது வேலை இல்லை. கடந்த நான்கு மாதமாக திருப்பூ ரில் ரொம்பவும் மோசமாக இருக்கிறது. எனது கண வர் கூலி வேலைக்கு சென்று வருகிறார். எங்கள் இரு மகள்கள் அரு கில் இருக்கும் பள்ளியில் படித்து வருகின்றனர்.  இப்பொழுது காலாண்டு தேர்வுக்கு பணம் கட்ட வேண்டிய நிலையில் சிரமமாக இருக் கிறது. எனது கணவருக்கும் வேலை சரியாக இல்லை. அரிசி கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதி கரித்திருக்கிறது. துவரம் பருப்பு, காய்கறி என எல்லா விலையும் அதிகரித்து விட்டது. திருப் பூர் மீண்டும் நல்ல நிலைக்கு வந்து எங்களுக்கு  வேலை கிடைத்தாலே போதும். ரேஷன் அரிசி இல்லாவிட்டால், இங்கிருக்கும் ஏராளமான குடும்பங்களுக்கு சாப்பாட்டுக்கே வழி இருக் காது.

எம்.வேணி

நான் சிறுவயதில் இருந்தே திருப்பூரில் தான் இருக்கிறேன். 8 ரூபாய் சம்பளம் வாங்கிய காலத் தில் இருந்து இப்போது ஷிப்ட்க்கு 350 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் 8  ருபாய் சம்பளம் வாங்கிய போது கூட இவ்வளவு நெருக்கடி இருந்த தில்லை. செக்கிங் வேலை இல்லை. பனியன் கம்பெனியில் வேலை இல்லாவிட்டால் எங்க ளுக்கு வேலையில்லை. வட மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைந்த கூலியில் வேலை தருகிறார்கள். எங் களுக்கு வேலையில்லாத நிலையில் வீட்டு வாடகை அரிசி, பருப்பு, காய்கறி என அத்தியா வசிய செலவுகளை சமாளிக்க முடியாமல் மிக வும் கஷ்டப்படுகிறோம். போன மாதம் எப்ப டியோ சமாளித்து விட்டு வாடகை கொடுத்து விட் டோம். ஆனால் அடுத்த மாதம் பண்டு எடுத்து  தான் வீட்டு வாடகை தர வேண்டி இருக்கிறது. மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நிலமை சரி யில்லை. எல்லோரிடமும் அவர் மீது கோபம் இருக்கிறது. அடுத்த முறை கட்டாயம் அவர் ஜெயிக்க மாட்டார். ஒருவேளை மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் எல்லாம் தட்டு எடுத்து பிச்சை எடுக்க போவதை தவிர வேறு  வழியில்லை.

என்.உமாதேவி

நானும், எம்பிஏ படித்த எனது மகளும் வேலைக் குச் சென்று குடும்பத்தை சமாளித்து வருகிறோம். எனது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். இப் போது எனக்கு வேலை இல்லை. 10 வருடமாக வேலை பார்த்தாலும் இப்போது போல் முன்பு கஷ்டம் இருந்ததில்லை. எல்லா உணவு பொருள்  விலையும் கடுமையாக அதிகரித்து இருக்கி றது. கேஸ் விலையை தற்போது குறைத்து இருந்தாலும், ஆயிரம் ரூபாய் வருகிறது. குடும் பச் செலவை சமாளிப்பது கஷ்டமாக இருக் கிறது

ஆர்.ராஜாமணி

ஆரம்பத்தில் கம் பெனி வேலைக்கு போய் வந்தேன். கடந்த சில  ஆண்டுகளாக சாலை யோர வியாபாரியாக காய் கறி விற்று வருகிறேன்.  ஆனால், வருமானம் கிடைப்பது பெரும் போராட் டமாக இருக்கிறது. 2000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி சென்றால் 200 ரூபாய் கிடைப்பது பெரும்பாடு. பால் விலை கூட 16 இருந்து 19  ரூபாயா அதிகரித்துவிட்டது. கேஸ் விலை  200 குறைத்து இருப்பதாக சொல்கிறார்கள். அது கூட மோடி தேர்தலுக்காக தான் குறைத்து  இருக்கிறார். அதேசமயம் கடந்த பல மாதங்க ளாக எங்களுக்கு கேஸ் மானியம் வருவ தில்லை. நல வாரியத்தில் பதிந்திருப்பதால் மாதம் ரூபாய் 500 கிடைக்கிறது. வீட்டு வாடகை அடிப்படை, குடும்பச் செலவை நடத்துவதற்கே  ெரும் போராட்டமாக இருக்கிறது.

-வே.தூயவன்