districts

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல்

தருமபுரி, ஜூலை 6- நீர்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆறு பாறை களாக காட்சி அளிக்கிறது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோ கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள் ளது. குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழக எல்லையான தருமபுரி மாவட்டம், பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வருகி றது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண் ணீர் கரைபுரண்டு வெள்ளமாக ஓடும். அப்போது அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண் ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதற் கிடையே தமிழகத்தின் பல்வேறு பகு திகளில் இருந்தும், கர்நாடகா, ஆந் திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்க ளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். அவர்கள் தொங்கு பாலம், நடைபாதை, பார்வை கோபுரம் உள் ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். இதன்பின் எண்ணெய்  மசாஜ் செய்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் குளிப்பதோடு, குடும்பத்தி னர், நண்பர்களுடன் பரிசலில் சென்று மகிழ்வர். இந்நிலையில், கடந்த சில மாதங் களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.  இதனால் தற்போது ஒகேனக்கல் லுக்கு விநாடிக்கு 300 கனஅடிக்கும்  குறைவாகவே தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ள தால் கரைபுரண்டு ஓடிய ஒகேனக் கல் காவிரி ஆறு தற்போது வெறும் பாறைகளாக காட்சி அளிக்கிறது. ஆர்ப் பரித்து கொட்டிய ஐந்தருவி, மெயின் அருவி களையிழந்து வறண்டு காணப் படுகிறது. காவிரி ஆற்று பகுதியில் ஆங் காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. இது ஒருபுறம் இருக்க ஒகேனக் கல்லில் நீர்வரத்து குறைந்துள்ள தால் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங் கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட் டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதி லும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் காவிரி ஆற்றில் ஆங்காங்கே மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை தேக்கி அங்கிருந்து கூட்டு குடிநீர் திட்ட நிலையத்திற்கு கொண்டு சென்று சமாளித்து வருகின்றனர். இந்த நிலை  தொடர்ந்தால் ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்ப டும் அபாயம் உள்ளது. கடந்தாண்டு  ஜூலை மாதத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 20 ஆயி ரம் கனஅடி தண்ணீர் வந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆனால், இந் தாண்டு நீர்வரத்து குறைந்து காவிரி ஆற்றில் தண்ணீரின்றி பாறைகளாக காட்சி அளித்து வருகிறது.

;