districts

img

மனுதாரரை திட்டமிட்டு அழைக்கழிக்கும் அதிகாரிகள்!

உடுமலை, ஜூலை 7- மனுதாரரை திட்டமிட்டு அழைக் கழிக்கும் உடுமலை கோட்டாட் சியர் அலுவலக அதிகாரிகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த ஒரு வர், முதியோர் பாதுகாப்புச் சட்டத் தின்படி அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி கடந்தாண்டு உடுமலை வரு வாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில் மனு அளித்திருந்தார்.  இந்த மனுவை கண்டுகொள்ளா மல் இருப்பது தெரிந்து, பலமுறை  மனுதாரர் அலுவலகம் சென்ற  வந்த நிலையில், தற்போது பல  மாதங்கள் கழித்து உடுமலைப் பேட்டை கோட்டாட்சியர் அலுவல கத்தில் இருந்து கடிதம் வந்துள் ளது. இந்த விசாரணை கடிதத்தில்  ‘மனுதாரர் மனு செய்த நாள்  10/10/2024’ என்றும், ‘மனுதாரர் உடு மலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 14 ஆம் தேதியன்று 11:30 மணியள வில் ஆஜராக வேண்டும்’ என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூ லம், புகார்கள் குறித்து உரிய முறை யில் விசாரணை செய்து தீர்வு  காணாமல் தொடர்ந்து மனுதாரரை  அலைய வைப்பது என்ற அதிகாரிக ளின் நோக்கம் தெரிய வருகிறது. அதாவது, விண்ணப்பம் செய்த தேதி 10.10.2024 என்பது, நடப்பாண் டில் இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. மேலும், விசாரணைக்கு வர வேண்டிய ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என தெரிந்தும்  திட்டமிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள் ளது. விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுவிற்கு தீர்வு  காணாமல் காலத்தை கடத்தும் செய்யும் அதிகாரிகள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது.