சேலம், செப்.27- நீர்நிலைகளில் விவசாயப் பயன் பாட்டிற்கு வண்டல் மண் எடுக்கப் பட்டு வரும் பணிகள் குறித்து, இயற்கை வளங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திரரெட்டி ஆய்வு செய்தார். சேலம் மாவட்டத்தில் வண்டல், களிமண் ஆகியவற்றை விவசாயப் பயன்பாடு, மண்பாண்ட தொழிலுக்கு எடுத்துச்செல்ல தகுதிவாய்ந்த 200 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு மாவட்ட அரசிதழில் ஜூன் 25 ஆம் தேதியன்று, 53,095 கன அடி மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டது. இத னைத்தொடர்ந்து, இணையவழி மூலமாகவே வட்டாட்சியர்களால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இது வரை 30,516 கன அடி மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விவசாயிகளால் தற் போது வரை 25,686 கன அடி மண் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாழப்பாடி வட்டம், காரிப்பட்டி, புழுதிக்குட்டை, ஆனைமடுவு நீர்த் தேக்கம் மற்றும் சிங்கிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்நிலைக ளில் விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டுவரும் பணிகள் குறித்து, இயற்கை வளங் கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திரரெட்டி வெள்ளியன்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, நீர்நிலைக ளில் விவசாயப் பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுக்கப்பட்டுவரும் பணிகள் குறித்து தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி, வருவாய் கோட்டாட்சியர் அ. அபிநயா, சரபங்கா வடிநிலக் கோட்ட நீர்வள ஆதார அமைப்பு செயற் பொறியாளர் ஆனந்தன், துணை இயக்குநர் (கனிமவளம்) ஜெயந்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.