நாமக்கல், ஜன.2- பொங்கல் கரும்பு கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள், இலவ சமாக கரும்புகள் கேட்பதாக விவ சாயிகளிடமிருந்து குற்றச்சாட்டு கள் எழும் நிலையில், புகார் வந் தால் கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத் த்துள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அடுத்த சமய சங்கிலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த விவசாயிகள், பெரும்பாலும் தங்கள் நிலத்தில் கரும்புகளை பயிரிடுவது வழக்கம். அப்படி பயிரிடப்படும் கரும்புகளை அரசு கொள்முதல் செய்து பொங் கல் பண்டிகையை முன்னிட்டு, ரேசன் கடையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குகிறது. சராசரியாக சமய சங்கிலி, கலியனூர் கிராமத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்புகள் பயிரிடப்பட் டுள்ளது. கடந்த ஓர் ஆண்டுக ளுக்கு மேலாக விவசாயிகள் கரும்புகளை பராமரித்து வரும் நிலையில், தற்போது அறுவடை காலம் தொடங்கியுள்ளது. காவிரி பாசனக் கரும்புகளை வாங்க பல் வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகை தரு வது வழக்கம். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பொங் கல் பரிசுத் தொகுப்பில் வழங்கு வதற்காக கரும்பு ஒன்றுக்கு 35 ரூபாய் அரசு நிர்ணயித்தும், இப் பகுதியில் கொள்முதல் செய்யப்ப டும் விவசாயிகளுக்கு அந்த தொகை முழுவதுமாக வந்து சேர்வ தில்லை என விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அதிகாரியிடம் விவசாயிகள் கேட்டால், தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட கரும்புக ளில் குறை இருப்பதாக சொல்லி கொள்முதல் செய்வதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் பல விவ சாயிகள் அதிகாரிகளிடம் எந்த கேள்வியும் கேட்காமல், அவர்கள் கேட்கும் தொகைக்கு கரும்புகளை விற்று வருகின்றனர். மேலும், ஒரு லாரி லோடு கரும்பு கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்கு, 400 கரும்புகள் இலவசமாக தந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படு கிறது. இந்நிலையில், இப்பகுதியி லிருந்து கொள்முதல் செய்யப்ப டும் கரும்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ச.உமா வியாழனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களி டம் பேசுகையில், இடைத்தரகர்கள் தவிர்க்கப்பட்டு அதிகாரிகள் மூலம் கரும்புகள் கொள்முதல் செய்யப் படுகிறது. அதிகாரிகள் இனாமாக கரும்புகள் கேட்கப்படும் குற்றச் சாட்டுகள் குறித்து, தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. அப்படி ஏதேனும் புகார்கள் இருந்தால், விவ சாயிகள் தெரிவித்தால் கடுமை யான நடவடிக்கை மேற்கொள்ளப் படும், என்றார். இதையடுத்து, ஆட்சியர் சென்ற பிறகு அங்கிருந்த அதிகாரியிடம் விவசாயிகள், விவசாய சங்க நிர் வாகிகள் பேசுகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புகளுக்கு கரும்பு களை கொள்முதல் செய்ய, 10 சதவிகிதம் கமிசன் அல்லது இலவச மாக கரும்புகளை வழங்க வேண் டும் என அதிகாரிகள் கூறுகின்ற னர். இதுகுறித்து புகார் எதையும் மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக் கக்கூடாது எனவும் லஞ்சம் கேட் கும் அதிகாரிகள் மிரட்டுகின்றனர். இத்தகைய போக்கு தொடர்ந்தால் ஊர் மக்களை திரட்டி போராட் டத்தில் ஈடுபடுவோம், என்றனர். இதைக்கேட்ட அதிகாரிகள், உரிய முறையில் விசாரிப்பதாகக் கூறி அங்கிருந்து சென்றனர். தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்புகளை கொள் முதல் செய்வதற்கு, விவசாயிகளி டம் அதிகாரிகள் லஞ்சம் கேட் பதாக விவசாயிகள் மத்தியில் எழுந் துள்ள புகார் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.