தருமபுரி, அக்.8- பாரபட்சமின்றி அனைத்து தொழி லாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சிஐடியு- வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி பிஎம்பி ஆலையின் சட்ட விரோத கதவடைப்பின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவிகி தம் வழங்க வேண்டும். ஒப்பந்த மற்றும் தினக்கூலி தொழிலாளர் களுக்கும் பாரபட்சமின்றி போனஸ் வழங்க வேண்டும். தருமபுரியில் இஎஸ்ஐ அலுவலகம் திறப்பதை உறு திபடுத்த வேண்டும். தருமபுரியில் ஏசி எல் கேம்ப் அலுவலகம் செயல்ப டுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, சிஐடியு தருமபுரி டிஸ்ட்ரிக் டெக்ஸ்டைல் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.கண்ணதாசன் தலைமை வகித்தார். இதில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன், மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாவட்ட துணைத்தலைவர்கள் பி. ஆறுமுகம், சி.அங்கம்மாள், மாநிலக் குழு உறுப்பினர் சி.கலாவதி, பஞ் சாலை சங்க நிர்வாகிகள் சி.கோவிந்த ராஜ், ஏ.முருகன், ஜே.வேலு, எம்.பழ னிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.