districts

img

அவிநாசி ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் நீலகிரி எம்பி., ஆ.ராசா துவக்கிவைத்தார்

அவிநாசி, மே 9- அவிநாசி ஒன்றியம் கணியாம்பூண்டி, புதுப்பாளையம், கருமாபாளையம் உள் ளிட்ட ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணி களை நீலகிரி நாடாளுமன்ற  உறுப்பினர் ஆ. ராசா துவக்்கிவைத்தார். கணியாம்பூண்டி அருந்ததியர் குடியிருப் பில்ரூ.5.46 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை,  முருகம்பாளையத்தில் ரூ.20.89 லட்சம் மதிப் பில் சாலை அமைத்தல், புதுப்பாளையம் சாமந்தகோட்டை பகுதியில் ரூ.49.51 லட்சம்  மதிப்பில் சாலை உள்ளிட்டவை அமைக்கும்  பணி, முருகம்பாளையம், வஞ்சிபாளை யத்தில் ஆகிய பகுதியகளில் புதிதாக கட்டப் பட்ட நியாயவிலைக் கடை திறப்பு ஆகிய  பணிகளை ஆ.ராசா எம்பி., துவக்கி வைத் தார். முன்னதாக, கருமாபாளைம் ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மும் முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வரு கிறது. இதற்கு பரிந்துரைத்த ஆ.ராசாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பூங்கொடி சக்திவேல்(கருமாபாளையம்), தங்கமணி ரங்கசாமி(கணியாம்பூண்டி), பொறுப்பாளர்கள் சாமிநாதன், சரவணன் நம்பி, பழனிச்சாமி, பொன்காளியப்பன், கனி மொழி, துணைத் தலைவர் நாச்சிமுத்து உள் ளிட்டோர் பங்கேற்றனர்.