districts

img

அடிப்படை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, ஆக. 27- குடி விநியோகத்தை முறைப்ப டுத்தவும், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மலு மிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மதுக்கரை தாலுகா, மலுமிச்சம்பட்டி ஊராட்சி கிளைகள் சார்பில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  மலுமிச்சம்பட்டி ஊராட்சி நிர்வா கம் குடிநீர் விநியோகத்தை முறைப்ப டுத்தி சீராக வழங்க வேண்டும். சாக் கடை கால்வாய்கள் சுத்தம் செய்யப்ப டாததால், நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்ய வேண்டும். இந்திரா நகர் 60 அடி ரோடு பகுதியில் சாக்கடை அமைத்து தர வேண்டும். மலுமிச்சம்பட்டி நால் ரோடு சந்திப்பில் புதிதாக கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண் டும். மதுரை வீரன் கோவில் வீதி பொதுமக்களுக்கான மயானப் பாதை யில் தெரு விளக்கு வசதி, மயா னத்தில் தெருவிளக்கு வசதி. தண் ணீர் வசதி, காத்திருப்பு அறை அமைக்க வேண்டும். மலு மிச்சம்பட்டியில் அரசு மருத்துவ மனை அமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  மலுமிச்சம்பட்டி நால்ரோடு சந் திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் மதுக்கரை தாலுகா ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.சுப்பிர மணியம் தலைமை வகித்தார். இதில், ஒன்றியக் குழு செயலாளர் எம்.பஞ் சலிங்கம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோ வன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, ஒன்றியத் தலை வர் எஸ்.சி.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.மணி, கே.வரத ராஜ், டி.கே.ஆழ்வார், கிளைச் செயலா ளர்கள்  கே.சண்முகசுந்தரம், சரஸ் வதி, பி.ஆறுமுகம் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.