ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் (என்எச்ஐஎஸ்) காப்பீட்டு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்து. தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் டேனியல் விஜயகுமார், மாவட்டச் செயலாளர் கே.சாலமன் ராஜ், தலைவர் என்.தமிழ்செல்வன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் அ.தங்கபாசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.