districts

img

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதில் அலட்சியம்

உதகை, நவ.4- தண்ணீர் தொட்டியில் அடையா ளம் காண முடியாத அளவிற்கு விலங்கு ஒன்று அழுகிய நிலையில் இருந்த நிலையில், அதனை சுத்தம்  செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியும் அலட்சியப் படுத்திய நெல்லியாம்பாளையம் நகராட்சி அதிகாரிகளை கண் டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப ரப்பு ஏற்பட்டது.  நீலகிரி மாவட்டம், நெல்லியா ளம் நகராட்சிக்குட்பட்ட பந்தலூர்  பஜார் மற்றும் அதன் சுற்று வட்டா ரங்களுக்கு மேட்டுக்குடி 60,000 லிட்டர் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து மூன்று  நாட்களாக துர்நாற்றம் வருவதாக  பொதுமக்கள் புகார் தெரிவித்த னர். இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் தண்ணீர் தொட்டியில் குருவி விழுந்து கிடந்ததாகவும் அதை  சரிசெய்து விட்டதாக கூறிச்சென்ற னர்.  இருப்பினும் தொடர்ந்து துர் நாற்றம் வீசிய நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பந்த லூர் கிளைச் செயலாளர் பெரியார் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சியின் நீர் தேக்கதொட்டியை திறந்து பார்த்த னர். அப்போது, அழுகிய நிலை யில், அடையாளமே தெரியாத அள வில் விலங்கு ஒன்று அழுகி புழுக்க ளுடன் கிடந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.  இது குறித்து சம்பந்தபட்ட அதி காரிகளுக்கு தகவல் கொடுத்தும்,  அதிகாரிகள் அலட்சியப்படுத் தினர். இதனையடுத்து மார்க்சிஸ்ட்  கட்சியினர் நகராட்சி அலுவலகம் சென்று அங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னையடுத்து பேச்சுவார்த்தை நடத் திய அதிகாரிகள் உடனடியாக நக ராட்சி ஊழியர்களை அனுப்பி தண் ணீர் தொட்டியை முழுமையாக சுத் தம் செய்தனர். அப்போது தொட்டி யினுள் அழுகிற நிலையில் அடை யாளம் தெரியாத விலங்கு ஒன்றை  வெளியே எடுத்தனர். இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், இது கீரி  அல்லது பன்றி போல உள்ளது  என்றும் ஆய்வுக்கு அனுப்பினால் தான் உண்மை தெரியும் என்றனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யினர் கூறுகையில், இப்பகுதியே தொடர்ந்து சுகாதார மற்ற நிலை யில்தான் உள்ளது. இதுகுறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த மூன்று நாட்களாக  இந்த தொட்டியில் இருந்த தண்ணீ ரைத்தான் மக்கள் உபயோகித்து வந்தனர். எனவே, உடனடியாக இப் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து தொற்று நோய் எதுவும்  பரவாமல் மக்களை பாதுகாக்க  வேண்டும். இதுகுறித்து அதிகாரி களிடம் தெரிவித்துள்ளோம். அவர் களும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றனர்.