கோவை, ஜன. 8- நீட் தேர்வு நடைமுறையால் மருத்துவக் கல்விக்கும், மாணவர்க ளுக்கும் எந்தவித பயனும் கிடைக்க வில்லை. மாறாக பன்னாட்டு நிதி மூலதனத்துடன் மிகப்பெரிய வணிக சந்தையாக நீட் பயிற்சி மையங்கள் உருவெடுத்துள்ளதாக நீட் தேர்வு குறித்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரின்ஸ் குற்றம்சாட்டி னார். பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் சார்பில் நீட் 2024 - கேள்வித்தாள் முன்வைக்கும் கல்வியியல் சவால்கள் என்ற தலைப்பில் கல்விக் கருத்தரங்கு பேரூர் சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல் லூரியில் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் செய லரும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தரு மான சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். பேரூராதீனம் சாந்த லிங்க மருதாசல அடிகளார் வாழ்த் திப்பேசினார். புலவர் கா.ச.அப் பாவு முன்னிலை வகித்தார். நிகழ்ச் சியில், ஸ்டெம் பயிற்றுநரும் இயற் பியல் ஆசிரியருமான கு.ரவிக் குமார், 2024 நீட் தேர்வில் இயற்பி யல் பாடப் பிரிவில் இடம்பெற்றி ருந்த தவறான கேள்விகள் குறித் தும் அது தொடர்பான வழக்கு விவ காரம் குறித்தும் விளக்கினார். இதைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், நீட் என்பது ஒரு மதிப்பீட்டு முறையே இல்லை என்பதை கடந்த ஆண்டு கேள்வித்தாளும் நிரூபித்துள்ளது. எனவே நீட் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வு நடைமுறையால் மருத்துவக் கல் விக்கும், மாணவர்களுக்கும் எந்த வித பயனும் கிடைக்கவில்லை. பன் னாட்டு நிதி மூலதனத்துடன் மிகப் பெரிய வணிக சந்தையாக நீட் பயிற்சி மையங்கள் உருவெடுத் துள்ளன. இது குறித்து தமிழக சட் டப் பேரவையில் விவாதம் நடத்த வேண்டும். மேலும், வாரியத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றார். இதனையடுத்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்வில், புலவர் பூ.அ.ரவீந்தி ரன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் ச. சுப்பிரமணியம், செயலர் வீ.தெய் வேந்திரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளானோர் பங்கேற்றனர்.