நாமக்கல், செப். 6- ஏளூர் ஊராட்சியில் “நம்ம ஊரு சூப்பர்” நிகழ்வு செவ் வாயன்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நம்ம ஊரு சூப்பர் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கட்டமாக கிராமப்புறங்களில் உள்ள பொது இடங்கள், பள்ளிகள், அங்கன்வாடிகள், நீர்நிலைகள், சந்தைபகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய வற்றில் தூய்மையை உறுதி செய்யும் வகையில் தூய்மை பணி நடைபெற்றது. இதையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மூலம் மாணவ- மாணவி களுக்கு குடிநீர், சுகாதாரம் போன்றவை குறித்து பிரசார இயக்கம், ஊரக பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று மகளிர் சுகாதார குழு, சுகாதார ஊக்குநர் மற்றும் இதர உறுப்பினர்களை கொண்டு தனிநபர் கழிவறை உபயோகித்தல் மற்றும் பயன்பாடு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஏளூர் ஊராட்சி செய லாளர் வேலன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.