districts

img

சிஐடியு போராட்ட அறிவிப்பால் பணிந்த பேரூராட்சி நிர்வாகம்

தருமபுரி, நவ.2- சிஐடியு போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, புதிதாக திறக்கப்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஸ்டேன்ட் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே பல ஆண்டு காலமாக ஆட்டோ ஸ்டேன்ட் இயங்கி வந் தது. இதில் 23 ஆட்டோக்கள் இயங்கி வந்தன. இந்நிலை யில், புதிய பேருந்து நிலையம் அமைக்க பேரூராட்சி நிர்வா கம் முடிவு செய்தது. அதனடிப்படையில் புதிய பேருந்து நிலை யத்தை விரிவாக்கம் செய்து கட்டியதால், ஆட்டோ ஸ்டேன்ட் டுக்கான இடம் பறிபோனது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்  புதிய பேருந்து நிலையமும் திறக்கப்பட்டது. ஆனால், பேரூ ராட்சி நிர்வாகம் ஆட்டோ ஸ்டேன்டுக்கான இடத்தை ஒதுக்கா ததால், ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ  ஸ்டேன்டுக்கான இடம் ஒதுக்கக்கோரி, சிஐடியு தருமபுரி மாவட்ட கே.எம்.ஹரிபட் ஓட்டுநர் மற்றும் தொழிலாளர் சங்கத் தின் சார்பில், பென்னாகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு  வெள்ளியன்று, ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்துடன்  காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட் டது. இதனையறிந்த பேரூராட்சி நிர்வாகம் ஆட்டோ தொழி லாளர்களின் கோரிக்கைகள் குறித்து சனியன்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் என கடித அழைப்பாணை வழங்கி யது. அதனடிப்படையில் பென்னாகரம் பேரூராட்சி அலுவ லக கூட்டரங்கில் பேரூராட்சித் தலைவர் வீரமணி, செயல் அலு வலர் செந்தில் குமார், துணைத்தலைவர் லட்சுமி, காவல்  உதவி ஆய்வாளர் கருணாநிதி, போக்குவரத்து உதவி காவல்  ஆய்வாளர் மணிமாது, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்தி ரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.ஜீவா, மாவட்ட நிர்வாகி கள் பி.ஆறுமுகம், சி.ராஜி, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ராஜகோபால், பேருந்து நிலைய ஆட்டோ சங்க  நிர்வாகிகள் செல்வராஜ், முனிகிருஷ்ணன், குமார் உள்ளிட் டோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். அப்போது, புதிய தாக கட்டி திறக்கப்பட்ட பென்னாகரம் பேருந்து நிலையத் தின் அருகே உள்ள சமுதாயக்கூட்டத்தின் முன்பு ஆட்டோ  ஸ்டேன்ட் அமைத்துக் கொள்ள பேரூராட்சி நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இதனை ஏற்றுக்கொண்ட ஆட்டோ தொழிலா ளர் சங்கம், பேரூராட்சி நிர்வாகத்திற்கும், சங்கத்திற்கும் நன்றி  தெரிவித்தனர்.