அவிநாசி, ஜூலை 18- அவிநாசி கால்நடை மருத்துவமனை அருகே உள்ள நீரோடையில் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பதிக்கப்படுகின்றனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவமனை அருகே நீரோடை அமைந்துள்ளது. இதில் சில தனியார் நிறுவனங் கள் குப்பைகள் தினசரி கொட்டி தீ வைகின்றனர். இதனால் புகை சாலை முழுவதும் சூழ்ந்து, வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதில் வரும் புகை கார ணமாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகள் பலர் தெரிவிக்கையில் பலமுறை தெரிவித் தும் எந்தவித நடவடிக்கையும் பேரூராட்சி நிர்வாகம் எடுப்ப தில்லை. மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு நீரோடை யில் குப்பை கொட்டுவதைத் தடுத்து உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.