சேலம், ஜூலை 21- அயோத்திக்கு அழைத்துச் செல்வதாகக்கூறி 106 பேரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை சேலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அயோத்தி, காசி உட்பட பல் வேறு இடங்களுக்கு விமானம் மூலம் அழைத்துச் சென்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதாக திருப்பதியைச் சேர்ந்த சபானந்தம் என்பவர் அறி வித்துள்ளார். விமானம் மூலம் அயோத்தி சென்று வர ஒரு நப ருக்கு ரூ. 12 ஆயிரம் வரை பேக் கேஜ் கட்டணமாக வசூலிக்கப்பட் டது. இதனை நம்பிய சேலம், கரூர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 106 பேர் சுமார் ரூ.12 லட்சத்தை செலுத்தி னர். பணத்தை செலுத்திய அனை வருக்கும் விமான பயணச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த பயணச்சீட்டுடன் அனைவரும் மதுரை விமான நிலையத்துக்கு சென்றனர். அங்கு பரிசோதித்ததில், அது போலி விமான பயணச்சீட்டு என்பது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். தர கரை நம்பி ஏமாற்றமடைந்த சேலம், அம்மாப்பேட்டையைச் சேர்ந்த 10 பேர் கொடுத்த புகாரின் பேரில், சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அம்மாப்பேட்டை யைச் சேர்ந்த ராஜா என்பவர், டிரா வல்ஸ் நிறுவனங்கள் மூலம் பேருந்து, ரயில்களில் சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் சென்று வந்துள்ளார். திருப்பதியைச் சேர்ந்த சபானந்தம் என்பவர் சிகிச்சைக்காக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்கு வந் தபோது அவர்களுக்கிடையே பழக் கம் ஏற்பட்டுள்ளது. ஆன்மிக பய ணம் குறித்து ராஜா சபானந்தத்தி டம் தெரிவித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் இருப்பதாகக் கூறிய சபா னந்தம் பயணச்சீட்டு எடுத்துத் தருவ தாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜா, அயோத்தி சென்று திரும்ப ஒருவருக்கு ரூ.12 ஆயிரம் என அறி வித்தார். அதனை நம்பி 100க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தியுள் ளனர். இந்தப் பணத்தில் பெரும் பகுதியை பெற்றுக்கொண்ட சபா னந்தம், போலி விமான பயணச் சீட்டு வழங்கி பொதுமக்களையும், ராஜாவையும் ஏமாற்றி மோசடியை திட்டமிட்டு அரங்கேற்றியது தெரி யவந்தது. இதையடுத்து, சபானந் தத்தை இரும்பாலை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர். போலி பயணச் சீட்டு என தெரியாமல் ஏமாந்த ராஜாவை போலீசார் விடுவித்த னர்.