சேலம், அக்.13- ஓமலூர் அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஞாயிறன்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம், ஓமலூர் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, முன்னிலையில் ஞாயிறன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். புற நோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, மருந்து மாத்தி ரைகள் வழங்குமிடம், சித்த மருத்துவமனை பிரிவு, சிடி ஸ்கேன் எடுக்கும் அறை, எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், மருத்துவமனையில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்ததுடன், தொடர்ந்து மருத்துவமனையினை சிறந்த முறையில் பராமரித்து பணியாற்றிடும் வகையில் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி னார். இந்த ஆய்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) லலித் ஆதித்ய நீலம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பி.ராதிகா, துணை இயக்குநர் யோகானந்த் உள்ளிட்ட அரசு அதிகாரி கள் கலந்து கொண்டனர்.