districts

img

கோவை குற்றாலம் அருவியில் அமைச்சர் ஆய்வு

பொள்ளாச்சி, ஜன.20- சுற்றுலாத் தலமான கோவை குற்ற லாம் அருவியில் அமைச்சர் ரா.ராஜேந் திரன் திங்களன்று ஆய்வு செய்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் அமைந்துள்ள ஆழியார் அணை மிகவும் புகழ்பெற்ற நீர்தேக்கமாகும். ஆழியாறு அணைப்பகுதி பூங்கா புன ரமைப்பு பணி, செயற்கை நீருற்று, குழந்தைகள் விளையாட்டு உபகாணங் கள், படகு இல்லம் அமைத்து படகு  சவாரி, மாதிரி உருவங்கள் அமைத்தல்  உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கருத்துரு பெறப்பட்டுள்ளது. இந்நிலை யில், ஆழியார் அணை பகுதி மற்றும்  பூங்காவில் சுற்றுலாத்துறை அமைச்சர்  ரா.ராஜேந்திரன் ஞாயிறன்று கள ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள கோதவாடி ஊராட்சியில் உள்ள குருநல்லிபாளையம் கோதவாடி குளத் தில் நீர் நிரப்பி சுற்றுலாத் தலமாக மாற்று வது தொடர்பாகவும் அமைச்சர் ஆய்வு  செய்தார். இதைத்தொடர்ந்து திங்க ளன்று கோவை, காந்திபுரம் பகுதியில்  உள்ள தமிழ்நாடு ஹோட்டல், சாடிவ யல் பகுதியில் உள்ள கோவை குற்றா லத்தில் அமைச்சர் ராஜேந்திரன், ஆட்சி யர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அருவி அருகே சுற்றுலாப் பயணிகள் பொருட்களை வைக்கும் அறை மற்றும்  கழிவறை, உடைமாற்றும் இடம் ஆகிய வற்றை மேம்படுத்துவது குறித்து அதி காரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். தொடர்ந்து சாடிவயல் பகுதியில் உள்ள பழங்குடி கிராம மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். இதன் பின் பூண்டியில் உள்ள வெள்ளிங்கிரி கோவில் அடிவாரத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், கோவை குற்ற லாம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக் கான அடிப்படை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை ரூ.9 கோடி வரை ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊதிய  உயர்வு குறித்து வனத்துறை அமைச் சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.