கோபி, பிப்.19- கோபி அருகே உள்ள குண்டேரிப் பள்ளம் அணைப் பகுதியில் தனிநபர் கள் சிலர் ஆழ்துளை கிணறு அமைத் ததை மூடி சீல் வைக்க வேண்டும் என வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் அமைச்சர் சு.முத்து சாமி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குண்டேரிப் பள்ளம் அணையானது கொங்கர் பாளையம், வினோபாநகர், வாணிப் புதூர், கவுண்டம்பாளையம், கள்ளியங் காடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிரா மங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும், பாசன வாய்க்கால் மூலம் நேரடியாக 2000 ஏக்கர் விவசாய நிலங்களும், மறைமுகமாக 5000 ஏக் கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர வனவிலங்குக ளின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில், குண்டேரிப் பள்ளம் அணைப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன் தனிநபர்கள் சிலர் குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கு ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர். இதனால், சுற்றுவட் டார கிராம மக்களின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வறட்சி ஏற்படும். எனவே, ஆழ்துளை கிணற்றை மூடி சீல் வைக்க வேண்டும், என வலியுறுத்தி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், திங்களன்று அணைப் பகுதியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை அறிந்த அப் பகுதி பொதுமக்கள், இப்பிரச்சனை யில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக்கூறி சத்தி - அத்தாணி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாததால், மறியலில் ஈடு பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்த அனைவரை யும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து, இரவு விடு வுத்தனர். ஆனால், கிராம மக்கள் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாமல் இடத்தை விட்டு செல்வதில்லை என்று தனியார் மண்டபத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை யடுத்து வீட்டுவசதிதுறை அமைச்சர் சு. முத்துச்சாமி கிராம மக்களை திங்க ளன்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நலன்கருதி இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட மாவட்ட நிர்வாகம் அரசு வழக்குரைஞர்களை கலந்து ஆலோசித்து நீதிமன்றத்தை அணுகுவது குறித்து முடிவு எடுக்கப் படும், என பொதுமக்களிடம் தெரிவித் தார்.