districts

img

மேட்டுப்பாளையம் சாலை மேம்பால பணி தீவிரம்

கோவை, செப்.8- மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன் பாளையம் மற்றம் ஜிஎன் மில்ஸ் பகுதிகளில் கட்டப்பட்டு வரும்  மேம்பால பணிகள் தீவிமடைந்துள்ளன. கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த  சாலைகளில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்பு பகுதிகள் முக்கியமானதாகும். இந்த சாலைகளின் வழியாக  தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க  தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பெரிய நாயக்கன்பாளையம் மற்றும் ஜி.என்.மில்ஸ் சந்திப்புப் பகுதிகளில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெரியநாயக்கன்பாளையத்தில் ரூ.115.24 கோடி  மதிப்பீட்டில் 1,882 மீட்டர் தூரம் நீளம், 17.60 மீட்டர் அகலத்தில்  48 தூண்களைக் கொண்டு 4 வழித்தட போக்குவரத்து கொண்ட  மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது

. ஜி.என்.மில்ஸ்  சந்திப்பில் ரூ.41.88 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரம் நீளம்,  17.20 மீட்டர் அகலத்தில், 14 தூண்களைக் கொண்டு 4 வழித் தட போக்குவரத்து கொண்ட மேம்பாலம் கட்ட முடிவு செய்யப் பட்டது. இதில், பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பில் கடந்த  2020 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதியும், ஜி.என்.மில்ஸ்  சந்திப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதியும்  மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 2 இடங்களிலும் மேம்பாலப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரிய நாயக்கன்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணியை  விரைவாக முடிக்க வேண்டும். மேம்பாலம் பணிக்காக வண்ணான்கோவில் அருகே மாற்றுப்பாதையில் போக்கு வரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரி சலைத் தவிர்க்க பெரியநாயக்கன்பாளையம், ஜி.என்.மில்ஸ்  பாலத்தின் கட்டுமானப் பணிகளையும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என்றனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பெரியநாயக்கன்பாளையம் சந்திப்பு மேம் பாலம் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்  தொடங்கி எல்எம்டபிள்யூ சந்திப்பு, பெரியநாயக்கன் பாளையம் சந்திப்பு ஆகியவற்றை கடந்து வண்ணான் கோவில் சந்திப்பில் முடிகிறது. இந்த பாலத்தால் 3 சந்திப்பு களிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த  பாலத்தின் கட்டுமானப் பணி 60 சதவிகிதம் முடிவடைந் துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் தூண்கள் அமைக் கப்பட்டுள்ளன. அவற்றின் மீது தளம் அமைப்பதற்காக 48 எண்ணிக்கையிலான தளங்கள் அமைக்க வேண்டியுள்ளது. இதில் 15 தளங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 33  தளங்கள் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இம் மேம்பாலத்தின் கட்டுமானப் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜி.என்.மில்ஸ் சந்திப்பு மேம்பாலம் அங்குள்ள ஜான் பாஸ்கோ சர்ச் அருகே தொடங்கி ஜி.என். மில்ஸ் சந்திப்பை கடந்து வெள்ளக்கிணறு பிரிவில் முடிவ டைகிறது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணியில் தற் போது 70 சதவிகிதம் முடிவடைந்துள்ளது. தூண்கள், மேல்  தளங்கள் அமைக்கப்பட்டு விட்டன. மேலும், மேம்பாலம் அருகே சர்வீஸ் சாலைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள்  நிலுவையில் உள்ளன. நடப்பாண்டு டிசம்பர் மாதத்துக்குள் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணியை முடிக்க இலக்கு  நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

;