திருப்பூர், ஜூன் 21 - திருப்பூர் மாநகராட்சியில் 440 ரூபாய்க்கு தூய்மை பணியாளர்களின் துடைப்பம் வாங்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து மேயர் தினேஷ்குமார் மறுப்பு தெரிவித்தார்.பாஜகவினரும், அதிமுக முன்னாள் அமைச் சரும் பொறுப்பில்லாமல் களங்கம் கற்பிப்ப தாகவும் அவர் குற்றம் சாட்டினார். திருப்பூர் மாநகராட்சி மேயர் அலுவல கத்தில் புதனன்று தினேஷ்குமார் செய்தியாள ரிடம் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் துடைப்பம் உள்ளிட்ட தூய்மை பணிக்கான ஒட்டு மொத்தமாக 10 பொருட்கள், ஒப்பந் தத்தில் குறைவான தொகை குறிப்பிட்ட வர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஈ-டென்டர் மற்றும் விளம்பரம் ஆகியவை அரசு வழிகாட்டுதல் படி முறைப்படி கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இதே பொருள் 430 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. 2020ல் அதிமுக ஆட்சியில் 450 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. 2021ல் வெளிப்படை யான ஒப்பந்தப்புள்ளி கோரி மூன்று நிறுவ னங்கள் கலந்து கொண்டதில் குறைவான தொகை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.
சமூக வலைதளங்களில் துடைப்பம் வாங் கியது 440 ருபாய் என்ற தவறான தகவல் பரப்பப்படுகிறது. மூங்கில் குச்சிகளால் ஆன ஆளுயுர துடைப்பத்திற்கான தொகையாக குறிப்பிட்டுள்ள நிலையில் வேண்டுமென்று திருப்பூர் மாநகராட்சிக்கும், திமுக அரசுக்கும் களங்கம் விளைவுக்கும் வகையில் பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை பரப்புவோர் மீது வன்மையான கண்டனம் தெரிவிக்கிறோம். இது தொடர் பாக அனைத்து ஆவணங்களும் முறைப்படி சரியானதாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களி டையே விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொது மக்களுக்கோ அல்லது எதிர்க்கட்சியினருக்கோ இதில் சந்தேகம் இருந்தால் எப்பொழுது வேண்டுமானாலும் மாநகராட்சி அலுவலகத்தில் இந்த ஆவணங் களை பார்த்து தெளிவு பெற்றுக் கொள்ள லாம். இது தொடர்பாக கருத்து தெரிவித் துள்ள அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டப் பேரவை துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமன், அவர்களது ஆட்சி காலத்தில் இது போன்ற நடைமுறை பின்பற்றாததன் காரணமாக அவருக்கு இந்த விவரம் தெரியவில்லை. அதேபோல் பக்குவப்படாத பாஜகவும், பொறுப்பற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் களும் இதனை பொய் பிரச்சாரம் செய்து வரு கின்றனர் என்று குற்றஞ்சாட்டினார். திராவிட மாடல் ஆட்சியில் முதல்வர் ஸ்டா லினுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள் நோக்கத்துடன் வதந்தி பரப்பி வருகிறார் கள். பொள்ளாச்சி ஜெயராமன் இதை கூறி யது கண்டிக்கத்தக்கது.
மேலும் அவர் கூறுகையில், 367 கிலோ மீட் டர் தொலைவில் சாலை சீரமைத்து கொடுத் துள்ளோம். 800 டன் குப்பை வெளியேற்றம் செய்யப்படுகிறது. குடிநீர் விநியோகம் முறை யாக நடைபெறுகிறது. மாநகராட்சி நிர்வாகத் திற்கும், தமிழக அரசுக்கும் அவப்பெயர் ஏற்ப டுத்தும் விதமாக அவதூறு பரப்பி வருகின் றனர். பாஜகவினர் திட்டமிட்டு பொய் பிரச்சா ரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வரு கின்றனர். சந்தேகம் உள்ளவர்கள் நேரடியாக வந்து கோப்புகளை பார்வையிடலாம். ஏதா வது குறை இருப்பின் அவர்கள் மீது முறை யான நடவடிக்கை எடுக்கவும் தயார் என் றார். அதிமுக ஆட்சியில் டெண்டர் இல்லாமல் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் (பொள்ளாச்சி ஜெயரா மன்) அரைவேக்காடுத்தனமாக பேசி உள் ளார். ஒரு பொருளை மற்றொரு பொருளு டன் ஒப்பிட்டு பார்ப்பதா? என கேள்வி எழுப் பினார். மாநகராட்சியின் ஓர் ஆண்டு சாதனையை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. மக்கள் விரும்பக்கூடிய ஒரு மாநக ராட்சி நிர்வாகமாக தற்போது மாறி இருப்பதா கவும், இதனை ஏற்றுக் கொள்ள முடியாததால் இதுபோன்ற பொய்யான தகவல்கள் பிரச் சாரம் மேற்கொள்ளப்படுவதாகும் அவர் தெரி வித்தார். ஏற்கனவே அதிமுகவில் ஓட்டை விழுந்துவிட்டது. இன்னும் கொங்கு மண்ட லம் எங்கள் கோட்டை என பொள்ளாச்சி ஜெய ராமன் பேசிக் கொண்டிருக்கிறார். நான் ஆதாரத்துடன் பேசுகிறேன். வெறும் வாயை மெல்பவர்களுக்கு என்ன இருக்கி றது? களங்கம் கற்பிப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பக்குவப்படாத பாஜகவும், பொறுப்பில்லாத முன்னாள் அமைச்சரும் சேற்றை வாரி இறைக்கின்றனர். இது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்படும் எனவும் மேயர் தினேஷ்குமார் கூறினார்.