அவிநாசி, ஜூன் 30- மருத்துவர் ஒரு பொருட்டல்ல, மாட்டு கோமியம் தான் பாஜக வினருக்கு மருந்தாகும். என அவி நாசியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் சர வணதமிழன் தெரிவித்துள்ளார். போதைக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்டம், அம்மாபாளை யம் பேருந்து நிறுத்தம், குமரன் காலனி, பாரதி நகர், கோபால் டி மில் உள்ளிட்ட இடங்களில் ஞாயிறன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கத்திற்கு வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் நாக ராஜ் தலைமை வகித்தார். ஒன்றி யத் தலைவர் சந்தோஷ் குமார், செயலாளர் ஹனிபா, பொருளா ளர் வடிவேல், நந்தகோபால், உள்ளிட்டோர் முன்னிலை வகித்த னர். இந்த இயக்கத்தை துவக்கி வைத்து வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் எல்.சரவண தமிழன் பேசுகையில், முறைகேடு என்பது பாஜக ஆளும் குஜராத்தில் இருந்து தான் துவங்குகிறது. நாட்டி னுடைய பிரதமர் என்ன படிப்பு படித்தார் என்பது இதுவரை தெரிய வில்லை. எங்கு கல்வி கற்றார் என்ப தும் கூட தெரியவில்லை. ஆனால், கல்விக்குழுவிற்கு தலைவராக இவர் தான் இருந்து வருகிறார். தமிழ்நாட்டில் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல்வர், பசு மாட் டிற்கு குளிர்சாதன வசதியும், ஆம்பு லன்ஸ் வசதியும் ஏற்படுத்தி கொடுத் துள்ளார். பாஜகவினரை பொறுத்த வரை மருத்துவர் என்பது பெரிய பொருட்டல்ல. பசுமாட்டு கோமி யம் தான் மருந்து என்று பேசுபவர் கள். உலகத்தில் மிகச்சிறந்த மருத் துவர்கள் தேர்வாகும் நாடாக கம்யூனிச தேசமான கியூபா இருந்து வருகிறது. அம்பானி துறைமுகத்தி லிருந்து தான், போதைப்பொருள் இந்தியாவிற்குள் வருகிறது. தமிழகத்தில் சிறுவர் முதல் பெரி யவர் வரை போதைக்கு, அடிமை யாகி வருகின்றனர். எளிதில் பத்து ரூபாய்க்கு போதை சாக்லேட், 30 ரூபாய்க்கு ஸ்டாம்ப் வடிவில் போதைப்பொருள் விற்பனை நடை பெற்று வருகிறது. இதையெல்லாம் அரசாங்கம் கவனத்தில் கொண்டு முழுமையாக தடை செய்ய வேண் டும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், என்றார். இந்நிகழ் வில், வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் பாலசுப்பிர மணியம், முன்னாள் நிர்வாகிகள் காமராஜ், பாலசுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, பழனிசாமி, வெங்க டாசலம், திருமுருகன்பூண்டி நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி யம், தேவராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.