districts

img

பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை மாதர், மாணவர், வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக. 22- கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொலை செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோட்டில் புதனன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர்  சங்க மாவட்டச் செயலாளர் என்.ரஞ்சித் குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஏ.விசு வநாதன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பா.லலிதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மல்லிகா நன்றி கூறினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங் களை எழுப்பினர். உதகை இதைபோன்று, உதகையில் பெண் வழக்கறிஞர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலக நுழைவு வாயிலில் புதனன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு, மாவட்ட பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலை வர் ரேவதி தலைமை வகித்தார். செயலா ளர் கவிதா, துணைத்தலைவர் மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவருக்கு நியா யம் கேட்டும்,  தாமதமாக நீதி வழங்கு வது அந்த பயிற்சி பெண் மருத்துவருக் கான அநீதி என்றும், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். தர்ணா போராட்டத்தில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.