districts

img

அரசு மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆய்வு

கோவை, ஜூலை 27- கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில், சுகாதாரத்துடன் தரமான மருத்துவ  சிகிச்சையை உறுதிப்படுத்திட வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. கேப்டன் லட்சுமி அம்மையா ரின் நினைவு நாளையொட்டி, அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தினர் பல்வேறு வடிவங்க ளில் மக்கள் இயக்கங்களை மேற் கொண்டு வருகின்றனர். இதன்ஒருபகுதியாக, கோவை  மாவட்டத்தில் உள்ள அரசு மருத்து வமனைகளில் வெள்ளியன்று மாதர் சங்கத்தினர் ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து மாதர் சங்க கோவை மாவட்டச் செயலாளர் சுதா  கூறுகையில், கோவை மாநகரில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட  மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான மக்கள் கோவை அரசு மருத்துவமனையால் பயன டைகின்றனர்.  இதேபோல பொள்ளாச்சி அரசு  மருத்துவமனைக்கும் சுற்றுவட்டார  கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான  பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வதற்காக மாதர்  சங்கம் சார்பில் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மருத்துவர்கள், செவி லியர்கள் பற்றாக்குறை நிலவி வரு கிறது. அரசு மருத்துவமனைகள் மற் றும் பொது சுகாதார மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப  வேண்டும். மருத்துவமனைகளில் முகப்பு பகுதி மட்டுமே தூய்மைப் படுத்தி பராமரிக்கப்படுகிறது. ஆனால் நோயாளிகள் சிகிச்சை  பெறும் வார்டுகளில் தூய்மை இல் லாத நிலை இருந்து வருகிறது.  குறிப்பாக கழிப்பிடங்கள் முறை யாக பராமரிக்கப்படுவதில்லை. அதேபோல கழிவறைகள் பழுதா கும் பட்சத்தில் நாட்கணக்கில் பூட்டி  வைக்கப்படுவதால் நோயாளிகள்  பலர் கட்டணக் கழிப்பிடங்களை நோக்கி செல்லும் சூழல் உருவாகி றது. தீக்காய சிகிச்சை பிரிவில் மின் விசிறிகள் பயன்படுத்துவதை தவிர்த்து குளிர்சாதன வசதி ஏற்ப டுத்தப்பட வேண்டும். அரசு மருத்து வமனைகளில் ஒப்பந்த அடிப்படை யில் நீண்ட காலமாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும்  காவலர்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டும். ஏழை எளிய மக்க ளுக்கான மருத்துவமனையாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை இருப்பதால் அதனை அனைத்து வசதிகளுடன் உரிய முறையில் பராமரிக்க வேண் டும்.  ஆரம்ப சுகாதார நிலையங்க ளில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப  சிகிச்சை அளிக்க வசதிகளை ஏற்ப டுத்த வேண்டும். பெரும்பாலான  அரசு மருத்துவமனைகளில் கட்டிடப்  பராமரிப்பு முறையாக இல்லாத நிலை உள்ளது. புற்றுநோய் சிகிச்சை பிரிவு, நுரையீரல் சிகிச்சை பிரிவுகளில் கூடுதல் படுக் கைகள் ஏற்படுத்தி சுகாதாரத்துடன் பராமரிக்க வேண்டும் என்றார்.  இந்த ஆய்வின்போது, அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதிமணி,  பொருளாளர் உஷா உள்ளிட்ட மாவட்டக்குழு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.