திருப்பூர், நவ.25 - கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத் திற்கு நீதி வழங்கக் கோரியும், இதற்காக சென் னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகை யிடும் போராட்டத்தில் ஈடுபடவிருந்த மாதர் சங்க நிரவாகிகளை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்தும் திருப்பூரில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலா ளர் கு.சரஸ்வதி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பானு மதி, மாவட்டத் துணைத் தலை வர் ஆர்.மைதிலி, மாற்றுத் திறநாளிகள் நலச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜெய பால் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா, நிர்வாகிகள் சாவித்ரி, வடக்கு ஒன்றிய செயலாளர் பானு மதி உட்பட மாவட்ட நி்ரவாகிகள் மற் றும் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இறுதியாக மாதர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் அவிநாசி செல்வி நன்றி தெரிவித்தார்.