districts

img

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணிகள் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு பெரி யார் காலனி பகுதியில், கடந்த நான்கு மாதங்க ளுக்கு மேலாக சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, பெரி யார் காலனி ஏழாவது வீதி ஒன்பதாவது வீதி மற்றும் விவேகானந்தர் வீதிகளை சாலை பணிக்காக தோண்டி போடப்பட்டது. இதன் பின் அச்சாலைகளில் கற்களை பரப்பி விட்டனர். பின்னர் இப்பக்கமே சாலை பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. கடந்த நான்கு மாதங்க ளாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இதனால் அந்த பகுதி மக்கள் போக்கு வரத்திற்காக மிகுந்த சிரமப்பட்டு வருகிறார் கள். மேலும், கற்கள் பரப்பட்ட சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகி றது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத் திடம் பலமுறை வலியுறுத்தியும் சாலைப் பணிகள் துவங்காததால் சனியன்று மார்க் சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். பெரியார் காலனியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, வேலம்பாளையம் நகரக்குழு உறுப்பினர் கவிதா தலைமை ஏற்றார். இதில், நகரக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுகுமார், பி.பாபு ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலை வர்கள், ஒரு வார காலத்திற்குள் சாலைப்பணி களை துவங்காவிட்டால், பெரியார் காலனி நுழைவு வாயில் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாநகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தில், கட்சியின் கிளைச் செயலாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.