திருப்பூர், செப். 6 - ஏழை மக்களுக்கு கடன் கொடுப்பதாகச் சொல்லி கடன் வலையில் சிக்க வைத்து அவர் களை மிரட்டி அவமானப்படுத்தி பணம் வசூ லிக்கும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியு றுத்தி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனக ராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் குண்டடம் ஒன்றியம் சூரியநல்லூர் பஞ்சாயத் தில் உள்ள இடையன் கிணறு, நவக்கொம்பு போன்ற பகுதிகளில் உள்ள பட்டியலின அருந் ததிய மக்கள், நுண் நிதி நிறுவனத்திடம் இருந்து ஏராளமான கடன்களை பெற்றி ருக்கிறார்கள். கடன் பெற்ற மக்கள் தற்சமயம் தற்கொலை பாதைக்குத் தள்ளப்படும் அவ லம் நிலவுகிறது. தாராபுரம் வட்டத்தில் எல்என்டி, கிராம விடியல், மகேந்திரா ஜீவன் இப்படி எண் ணற்ற நுண் நிதி நிறுவனங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் கிரா மப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களி டம் ஏராளமான நிபந்தனைகளை எழுதி வாங்கிக்கொண்டு கடன்களை வழங்குகி றார்கள். மக்களும் எப்படியாவது பணம் கிடைத்தால் சரி என்ற உணர்வோடு வறு மைக்கு ஆட்பட்டு பணத்தை பெறுகின்றனர். வாங்கிய பின் கடனை திருப்பி செலுத்த இய லாத நிலை நிலவுகிறது. இந்தச் சூழ்நிலை யில் கிராமப்புறங்களில் மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய, வசூ லிக்கக் கூடிய அலுவலர்கள் அதிகாலை ஏழு மணிக்கு ஊருக்குள் வந்து விடுவார்கள். மாலை 7 மணி வரை ஊரில் சுற்றி கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு ஓய்வு இருக் கிறதா? உணவருந்து செல்கிறார்களா? என்ப தெல்லாம் கூட தெரியாது. கடன் வாங்கிய வர்கள் இவர்கள் வருவதைப் பார்த்து காடுக ளுக்குள் சென்று மறைந்து கொள்வார்கள். இவர்கள் சென்ற பிறகு வீட்டுக்கு வரு வார்கள். அப்படிப்பட்ட நிலைமையும் இருக் கிறது. சில சமயம் கடன் வசூலிக்க வருப வர்கள் வீட்டிலேயே இருந்து விடுவார்கள். வீட்டை விட்டு போக மாட்டேன் என்று சொல்லி அடம் பிடிப்பார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு பேசினாலும் கேட்க மாட் டார்கள். காவல்துறை மூலம் நடவடிக்கை வரும்போது இவர்கள் வீட்டை விட்டு ஓடிப் போய் விடக்கூடிய சம்பவம் நடந்துள்ளது. கடன் பெற்றவர் இறந்து விட்டால் கடன் தள்ளு படி செய்யப்படும் வழக்கம் உள்ளது. ஆனால், சில நிறுவனங்களில் மனைவி இறந் தால் கணவனை கடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தக்கூடிய நிலையும் இருக்கிறது. சிலர் வீட்டருகில் நின்று கொண்டு வீட்டைப் பூட்டி சீல் வைக்க வேண்டும், வீட்டிலிருந்து வெளியேறுங்கள் என்று மிரட்டக்கூடிய நிலைமை உண்டு. சிபிஎம் சார்பில் வீட்டை பூட்டினால், பூட்டை உடைப்போம் என்று தைரியம் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றது உண்மை, பணத்தை திருப்பிச் செலுத்த கால அவகாசம் மட்டும் தான் கேட்கப்படுகி றது. அதை தர மறுத்து எண்ணற்ற அவமா னங்களை மக்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. ஏழை மக்கள் பெற்றுள்ள கடனில் கடனுக் கான வட்டி அபராத வட்டி ஆகியவற்றை தள் ளுபடி செய்ய வேண்டுகிறோம். வீட்டுக்கு வந்து மிரட்டுவது, தகாத வார்த்தைகள் பேசும் அலுவலர்கள் மீது தீண்டாமை வன் கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், கடன்கள் வழங்கப்படும் என்று சொல்லி ஒவ்வொருவருக்கும் ஐந்து கடன், ஆறு கடன் வழங்கும் நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித் துள்ளார்.