திருப்பூர், மே 17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரம் வ.உ.சி நகர் கிளை சார்பாக 27 ஆவது வார்டு மற்றும் 23 ஆவது வார்டு பொதுமக்களின் அடிப் படை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண கோரி மாநகர மேயர் ந.தினேஷ்குமாரி டம் மனு கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாந கரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், கட்சி மாநகரக் குழு உறுப்பினர் துரை.சம்பத், கிளைச் செயலாளர் கிருத்திகை வாசன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொருளாளர் அருண் மற்றும் வார்டு பொதுமக்கள் கலந்து கொண்ட னர். இம்மனுவில் குமார் நகர் பிரதான சாலையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் குடிநீர் கசிவை சரி செய்ய வும், சாலையில் வேகத்தடை அமைக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், வ.உ.சி நகர் மூன்றாவது வீதி தெற்கில் சாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காணவும், வ.உ.சி. நகர் வடக்கு நான்கா வது வீதியில் சிறுபாலம் அமைத்து தர வும் கோரி மேயரிடம் மனு அளிக்கப்பட் டது.