தருமபுரி, அக்.15- செங்கொடிபுரத்திற்கு குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தருமபுரி நக ராட்சி ஆணையர் இரா.சேகரிடம் திங்களன்று மனு அளித்தனர். தருமபுரி நகராட்சி, 17 ஆவது வார்டுக்குட்பட்ட செங் கொடிபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பட்டியலினத்தைச் சேர்ந்த இம் மக்கள், தூய்மைப் பணியாளர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். ஏழ்மையில் வாழ்க்கை நடத்தும் இம்மக்களால் குடிநீர் இணைப்பு பெற வசதி இல்லை. எனவே, இப்பகுதிக்கு நகராட்சி மூலம் பொது குடிநீர் குழாய் அமைத்துத்தர வேண்டும். மேலும், செங் கொடிபுரம் நகரத்தின் முக்கிய பகுதி என்பதால், மக்கள் நடமாட்டமும், போக்குவரத்தும் அதிகமாக காணப்படு கிறது. வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் பல நேரங்களில் தெருக்களில் உள்ளவர்களுக்கும், நடந்து செல்வோர்களுக்கு விபத்து ஏற்படுகிறது. எனவே, செங்கொடிபுரத்தின் துவக்கத்திலும், முடிவிலும் வேகத் தடை அமைக்க வேண்டும். இருண்டு காணப்படும் இப் பகுதிக்கு தெருவிளக்கு அமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் திங்களன்று நகராட்சி ஆணையரிடம் மனு அளித்த னர். இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் வே.விசுவநாதன், கிளைச் செயலாளர் எஸ்.நிர்மலா ராணி, மாதர் சங்க நகரத் தலைவர் சுபா, நிர் வாகி தமிழ்மணி ஆகியோர் உடனிருந்தனர்.