தருமபுரி, நவ.14- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந் திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடு பட்டனர். பாஜக தலைமையிலான ஒன் றிய அரசின் மக்கள் விரோத கொள் கைகளை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வியாழ னன்று தருமபுரி மாவட்டத்தில் மக் கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற் றது. அப்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வேண் டும். எரிபொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனி யார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான காவிரி உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட் டன. இண்டூர் பகுதிக்குழு சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச் சாரத்திற்கு, பகுதிக்குழு செயலா ளர் சி.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சின்னசாமி, மாவட்டக்குழு உறுப் பினர் கே.என்.மல்லையன், பகுதிக் குழு உறுப்பினர்கள் குப்புசாமி ராஜா, நீலமேகம் பரமசிவம் கண் ணியப்பன், சிவப்பிரகாசம் ஆகி யோர் கலந்து கொண்டனர். ஏரியூர் ஒன்றியம் முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச் சாரத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.தங்கராஜ் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஆர்.சிசுபாலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.குமார், என்.பி.முருகன், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் மானிக்கம், குழந்தை சாமி, தங்கம்மாள், சிவசக்தி, ராஜா, அப்பாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். பென்னாகரம் ஒன்றி யக்குழு சார்பில் நடைபெற்ற மக் கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு ஒன்றி யச் செயலாளர் ஆ.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.மாதன், வி. ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.அன்பு, எம்.சிவா, எஸ்.செல் லன், வி.சுதா, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் அயோத்தி, எம்.வளர்மதி, முனிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.