districts

img

பள்ளி மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூன் 21- எலச்சிபாளையம் அருகே சக் கராம்பாளையம். கருமகவுண்டம் பாளையம், கோக்கலை, பெரிய மணலி வழியாக இயங்கி வந்த அரசு பேருந்துகள் மீண்டும் இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். கோக்கலை கிராமம், கவுண் டம்பாளையம், சக்கரம்பாளை யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 25 வருடத்துக்கு முன்பு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலை யில், கடந்த இரண்டு வருடங்க ளாக கொரோனா தொற்று பாதிப்பு  காலத்தில் பேருந்துகள் அப்பகுதி வழியாக இயக்கப்படுவது நிறுத் தப்பட்டது. இதனால், எலச்சிபா ளையம் சென்று படிக்கும் பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இதனால் வெளியூர்  வேலைக்கு செல்லும் தொழிலா ளர்களும், பெண்களும் பல்வேறு  சிரமங்களை சந்தித்து வருகின் றனர். எனவே, இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சர். போக்குவரத்து துறை என பல்வேறு துறைக ளுக்கு கோரிக்கை மனு அனுப்பப் பட்டது. ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே, உடனடியாக இப்பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது.  மார்க்சிஸ்ட் கட்சி கர்மாகவுண் டம்பாளையம் நிர்வாகி பி.முருகே சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில், கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் துவக்கி வைத்து பேசினார்.  ஒன் றிய செயலாளர் கே.எஸ்.வெங்க டாசலம். மாவட்ட குழு  உறுப்பினர்  ஜீ.பழனியம்மாள், கருமாகவுண் டம்பாளையம் வார்டு உறுப்பினர்  சாந்தி மற்றும் பள்ளி மாணவர்கள்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.