மேட்டுப்பாளையம், ஆக.3- மண்சரிவால் பாதிக்கப்பட்ட மலைரயில் போக்குவரத்து பகுதிகளில், சுமார் 30க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் சீரமைப் புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி காலை குன்னூர் வழியே உதகை செல்ல நீலகிரி மலைரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மழை ரயிலில் பயணிக்க ஏராளமான சுற்று லாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், மலைரயில் கடந்து செல்லும் மலைப்பாதையில் பெய்த கனமழை காரண மாக, ஹில்குரோ - அடர்லி ரயில் நிலையங்க ளுக்கு இடையே மண்சரிவுகள் ஏற்பட்டன. இதில் மரங்களும், கற்களும் சகதியோடு, மண்ணும் சரிந்து தண்டவாளப் பாதை சேதம டைந்தது. இதனால், ஆக. 1 முதல் 6 ஆம் தேதி யன்று வரை மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மலைரயில் கடந்து செல்லும் இருப்புப்பாதையில் சரிந்து கிடக்கும் மண் சகதிகள், மரங்கள் மற்றும் பாறைகளை அகற்றி தண்டவாளத்தை சீர மைக்கும் பணி ரயில்வே பணியாளர்களால் துவங்கப்பட்டது. ஆனால், சீரமைப்பு நடை பெறும் பகுதியில் அவ்வப்போது மழை பெய்தபடி இருப்பதால் பணிகள் தாமதமான தோடு மேலும் சில இடங்களில் சிறு சிறு அள வில் மண் சரிவுகள் ஏற்பட்டன. இந்நிலை யில், சனியன்று காலை முதல் மழை பெரு மளவு குறைந்ததால் சுமார் 30க்கும் மேற்பட்ட ரயில்வே பணியாளர்கள் சீரமைப்புப் பணி யில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.