districts

img

மணிப்பூர் வன்முறை: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தொடரும் போராட்டம்

திருப்பூர், ஜூலை 25 - மணிப்பூரில் வெறுப்பரசியலை விதைத்து, கலவரம் மூலம் குளிர்கா யும் ஒன்றிய, மாநில பாஜக அரசுகளை கண்டித்து திருப்பூரில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடு பட்டனர். மணிப்பூரில் பெண்கள் மீதான பாலி யல் வன்முறையை கண்டித்தும், கட்டுப் படுத்தாத பாஜக மோடி அரசை கண்டித் தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் திங்களன்று ஊத்துக்குளி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே. சரஸ்வதி தலைமை வகித்தார். தாலு காக்குழு உறுப்பினர் கே.ஏ.சிவசாமி, இந் திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா  செயலாளர் கே.பாலமுரளி ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார் மற்றும் மாதர் சங்கத்தினர் உள்பட திரளானோர் கலந்து கொண்ட னர்.

இடுவாய் 

இடுவாய் பேருந்து நிறுத்தம் அருகே திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுவாய் வடக்கு கிளை செயலாளர் கே.கருப்பசாமி தலைமை வகித்தார். இதில் இடுவாய் ஊராட்சி மன்றத்தலைவர் கே.கணே சன், மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த குமாரசாமி, நடராஜ்,  இடு வாய் பி.ஏ.பி.பாசன சபை தலைவர் தங்க வேல், நிலவள வங்கி இயக்குநர் ஈஸ் வரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட் சியைச் சேர்ந்த பொன்னுச்சாமி, மதி முக ஒன்றிய செயலாளர் சிவமணி, இந் திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  பழனிச்சாமி, நடராஜ், மக்கள் நீதி மய் யம் கட்சியைச் சேர்ந்த டி.ஏ.பழனிச்சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். திமுக இளைஞரணியைச் சேர்ந்த சர வணகுமார் நன்றி கூறினார். இந்த கண் டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். அவிநாசி சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங் கம் சார்பில், அவிநாசி அருகே உள்ள  கருவலூர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு மாவட்ட நிர் வாகி ஈஸ்வரமூர்த்தி, விசைத்தறி தொழி லாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வ புரம் கிளை செயலாளர் முருகேஷ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒன்றிய நிர் வாகி அருண், சிஐடியு ஆட்டோ தொழி லாளர் சங்க கருவலூர் கிளைச்செயலா ளர் சரவணன், சிஐடியு முன்னாள் நிர் வாகி ரங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு ஊழியர் சங்கம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  உடுமலை வட்டகிளை சார்பில், அனைத்து அரசு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், திரளா னோர் பங்கேற்றனர். இதேபோன்று தாராபுரத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டக்கிளை செயலாளர் இல.தில்லை யப்பன் தலைமை வகித்தார். இதில், வட் டக்கிளை தலைவர் கே.செந்தில்குமார், மாவட்ட இணைச்செயலாளர் எம்.மேக லிங்கம் கோட்ட இணைச்செயலாளர் கள் சுமதி, தங்கவேலு உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர். 

மாணவர் சங்கம் 

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி யில் இந்திய மாணவர் சங்கத்தின் சார் பாக செவ்வாயன்று போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு மாண வர் சங்க கல்லூரி கிளை தலைவர் உதய ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் மணிகண்டன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செய லாளர் பிரவீன் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் நிருபன் சக்கர வர்த்தி நிறைவுரையாற்றினார். முடிவில் கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.  இந்த  போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.