சேலம், ஜூலை 19- விஷவாயு மரணங்களை தடுக்க, துப்புரவுப் பொறியியல் துறையை பாடமாக ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வெள்ளியன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய, மாநில அரசுகள் விஷ வாயு மரணங்களுக்கு சட்டப்படி யான நிவாரணம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். துப்புரவுப் பொறி யியல் துறையை பல்கலைக்கழகங் களில் பாடமாக ஏற்படுத்த வேண் டும். மனித கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பணிக்கு அமர்த் துவதை தடை செய்தல் மற்றும் மறு வாழ்வு சட்டத்தை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும். வெளி நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அமைப் பின் மாவட்டத் தலைவர் ஆர்.குழந் தைவேல் தலைமை வகித்தார். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சேதுமாத வன், என்.பிரவீன் குமார், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞான சௌந்தரி, மாவட்டத் தலைவர் ஆர். வைரமணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பவித் ரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவ லகம் முன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலை வர் பி.ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.கோவிந்தசாமி, ஒன்றியத் தலைவர்கள் நீலமேகம், ஜி.நக்கீரன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாக ராசன், மாவட்டச் செயலாளர் பி. ஜீவா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஆர்.மல்லிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் டி.ஜி.சம்பத்குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் பி.பி.பழனிசாமி தலைமை வகித்தார். ஆதித்தமிழர் பேரவை மாநில தலைமை நிலைய செயலாளர் இரா.வீரவேந்தன், தமிழ் புலிகள் கட்சி மத்திய மாவட் டச் செயலாளர் இரா.சிந்தனை செல் வன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் த.சண்முகம், ஜெய்பீம் மக்கள் கட்சி நிறுவன தலைவர் அ.அ.அறிவழகன், சமூக நீதி கூட்டமைப்பு நீரோடை நில வன், திராவிடர் புரட்சிக் கழகம் மாநி லச் செயலாளர் வேலு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எச்.ஸ்ரீராம், தலித் விடுதலை இயக்க மாவட்டத் தலைவர் பொன்.சுந்தரம், விடு தலை வேங்கைகள் கட்சி மாவட்டத் தலைவர் இரா.தமிழன்பன், கொங்கு விடுதலை புலிகள் கட்சி செயலா ளர் சீ.விஸ்வநாதன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைச்செயலாளர் ரத்தினகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைத்தலைவர் யு.கே.சிவஞானம், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் ரவிக் குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண் மணி, தமிழ் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் இளவேளில், ஒடுக்கப் பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் அஸ்ரப் அலி, புரட்சிகர இளைஞர் முன்னணி மலர வன், பாலசுப்பிரமணியன், தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் ரா.ஆறுச்சாமி, தமிழ் நாடு திராவிடர் சுயமரியாதைக் கழக தலைவர் நேருதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், மாவட்ட துணைச்செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.