சேலம், ஜூன் 15- ரயில்வே ஊழியர்க ளுக்கு முறையாக பணி மாறுதல் வழங்காத சேலம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு - டிஆர் இயு சார்பில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டத்திற்கு புதியதாக ஊழியர்கள், நிரப்பப்பட்ட நிலையில், ஏற்கனவே 10 ஆண்டு களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை டிவிசன் மற்றும் மற்ற ரயில்வே மண்டலத்திற்கு செல்ல பணி மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும். கரூர் மற்றும் குன்னூர் ரயில்வே மருத்துவ மனைக்கு மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு தரமான மருத்துவ பரிசோதனை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தட்சிணா ரயில்வே தொழிற்சங்கம் (டிஆர்இயு) சார்பில் சேலம் கோட்ட மேலா ளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் கோட்ட தலைவர் எம். முருகேசன் தலைமை ஏற்றார். இதில் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளர் பிஜூ, ஓய்வுபெற்றோர் சங்க செயலாளர் சாம்பசிவன், சிஐடியு கட்டுமான சங்க நிர்வாகி சி.மயில்வேலன், டிஆர்இயு கோட்ட செயலாளர் கே.அல்லிமுத்து, பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட திரளான ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.