districts

எம்-சாண்ட் மண் விலையை குறைக்க வேண்டும்

சேலம், ஜூலை 31- சேலம் மாவட்டத்தில் 2500 மணல் லாரிக ளும் 1000 இலகுரக மணல் லாரிகளும் உள் ளது. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பு மின்றி எம்-சாண்ட் மற்றும் பிசாண்ட் மணல் கள் ஒரு யூனிட் இருக்கு ரூ.700 அதிகரித்துள் ளது. இதனால், கட்டுமான தொழில்கள் மேற் கொள்ள முடியாமல் முடங்கி உள்ளது. ஒரு யூனிட் எம்சாண்ட் 3500 ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 2000 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப் பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் அதிக அளவில் எம்-சாண்ட்மற்றும் பி-சாண்ட் மணல் விலை அதிகரித்துள்ளது. இதனை  திரும்பப்பெற வேண்டும் சேலம் மாவட்ட  ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளர் கள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு வழங் கினர். இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மணல் லாரி உரிமையாளர்கள், கட்டு மான பொருட்கள் விலை அதிகரித்துள்ள தால் அதிக அளவில் தொழில்கள் செய்ய முடி யாமல் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரஷர் உரிமை யாளர்கள் தமிழக முழுவதும் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டனர். 10 நாட்களாக நடை பெற்ற போராட்டத்தில் எவ்வித முன்னறி விப்பு இன்றி தற்பொழுது ஒரு யூனிட்டுக்கு 700 ரூபாய் விலை உயர்த்துள்ளனர். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இந்த விளைவு வைத்திருந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து அவர்கள் மீது ஊரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.