districts

img

பராமரிப்பின்றி பூட்டிக் கிடந்த பள்ளி கழிப்பறை சீரமைப்பு

அவிநாசி, டிச.13-  சேவூர் அருகே மங்கரசு வலையப்பா ளையம் கிராமத்தில் உள்ள பள்ளியில் பரா மரிப்பின்றி பூட்டிக் கிடந்த கழிப்பறை சீர மைக்கப்பட்டது. அவிநாசி ஒன்றியம், மங்கரசு வலையப் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பேரநாயக் கன்புதூர் நடுநிலைப்பள்ளியில் 155 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்ற னர். இங்கு மாணவர்களுக்கான கழிவறை யில் போதுமான தண்ணீர் வசதி இல்லாத தால் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் கழிவுகள் அடைப்பு ஏற்படுவதாகக்கூறி கழிப்பறையை தலைமையாசிரியை பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில் 6ம் வகுப்பு மாணவன் அவசர கதியால் இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள பள்ளத்திற்கு சென்றுள்ளான். சென்ற மாணவன் இன் னும் வரவில்லையே என அவனது சகோத ரர் தேடிச் சென்ற போது, தன்னை சுத்தப்ப டுத்திக் கொள்ள முடியாத நிலையில் மாண வர் அங்கேயே தவித்த நிலையில் நின்றது தெரிய வந்தது. இத்தகவலறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவிநாசி வருவாய்த் துறையினர் விசாரனை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக வட் டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பழுத டைந்த கழிப்பறைக்குத் தேவையான பொருட்கள் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு கழிப்பறை சீரமைக்கும் பணி நடைபெற் றது. இதையடுத்து உடனடியாக பள்ளிக்கு ழந்தைகளின் பயன்பாட்டிற்கு திறக்கப்ப டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.