districts

img

மனிதர்களை மாண்புடன் வாழ வைப்பது இலக்கியங்கள்

சென்னை, ஜன.12- மனிதர்களை மாண்புடன் வாழ வைப்பதில் இலக்கியங்களின் பணி  மகத்தானது  என்று கவிஞர் நந்த லாலா கூறியுள்ளார். ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச் சகத்தின் கீழ் இயங்கும் சென்னை  மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத் திட்டங்கள் மற் றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப் படம் மற்றும் டிஜிட்டல் கண்காட்சி கடந்த திங்களன்று தொடங்கி நடை பெற்று வருகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்தக் கண் காட்சியின் மூன்றாம் நாளான புத னன்று கவிஞர் நந்தலாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “இலக்கியம் படி: இதயம் விரியும்” என்ற தலைப்பில் பள்ளி மாணவர் கள் மற்றும் பொது மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், தனி மனித வளர்ச்சிக்கு அன்பு, அறிவு அவ சியம் என்றார். அதே நேரம் மனித நேயத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். செயலாற்றலை விட மனித நேயமும், மாண்புமே உலக மக்களை இணக்கத்துடன்  வாழ்விக்க  உதவும் என்றும், மனிதர்களை மாண் புடன் வாழ வைப்பதில் இலக்கியங்க ளின் பணி மகத்தானது என்றும் குறிப் பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய தேசிய  காசநோய் ஒழிப்புத் திட்ட அலுவ லர் மருத்துவர் ஜே.லாவண்யா, காச நோயை முறையான சிகிச்சையின் மூலம் முற்றிலும் குணப்படுத்தலாம் என்றார். 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத இந்தியாவை உரு வாக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல் வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. காசநோய் உள்ள அனைவரும், தொடர்ந்து மருந்து களை உட்கொண்டால் அந்த நோயி லிருந்து முழுமையாக குணமடைய லாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி மாண வர்களிடையே விநாடி வினா நடத் தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்பின் நடைபெற்ற அமர்வில், எழுத்தாளர் விமலா அண்ணாதுரை “விடுதலை போராட்டத்தில் மகளிர் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, இந்நிகழ்ச்சி களில் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் இயக்குநர் ஜே. காமராஜ், துணை இயக்குநர் டி.சிவக் குமார், கள விளம்பர அலுவலர் கே. ஆனந்த பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.