districts

img

காப்பீட்டுத் துறைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க!

திருப்பூர், ஆக.19- காப்பீட்டுத் துறைக்கு விதிக்கப் படும் ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என எல்ஐசி முகவர் கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள் ளது.  அகில இந்திய எல்ஐசி முக வர்கள் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டம் ஞாயிற்றுகிழ்மை சிஐடியு திருப்பூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் நடைபெற்றது. மாநிலத் தலை வர் பூவலிங்கம் தலைமை நடை பெற்ற இந்த கூட்டத்தில், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் வாழ்த்தி பேசினார். மாநிலச் செயலாளர் குமார் வேலை அறிக்கையை முன்வைத்தார். இதில், முகவர்களுக்கான குழுக் காப்பீட்டில் வயது வரம்பை நீக்க வேண்டும். ஆன்லைன் மூல மாக முகவர்கள் போடும் பாலிசிக ளுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். முகவர்களுக்கு நலவாரி யம் அமைக்க வேண்டும். காப்பீட் டுத் துறைக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும். மன்ற நிலை முகவர் களுக்கான கன்வென்ஷன் நடத்தப் பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.  இந்நிகழ்வில் செயல் தலைவர் அன்பு.நடராஜன், மாநிலச் செயலா ளர் ராஜா, கல்விக் குழு கன்வீனர் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்ட னர். முடிவில், மகிளா குழு ஒருங்கி ணைப்பாளர் அன்பரசி ஜூலியட் நன்றி கூறினார்.