நாமக்கல். பிப்.25- மோட்டார் தொழில்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வலியுறுத்தி வருகின்ற 28 ஆம் தேதி 15 நிமிடம் வாகனங்கள் நிறுத்தும் போராட்டத்திற்கு சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே பள்ளிபாளையத்தில், இக் கோரிக்கைகளை விளக்கி ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சார பயணத்தை சிஐடியு மேற்கொண்டது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் தொழிலை சீரழிக்கும் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தக்கூடாது. இன்சூரன்ஸ். எப்சி உள்ளிட்ட கட்டணங்கள் உயர்வினை திரும்பப்பெற வேண்டும். தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். ஆன்லைன் அப ராதம் என்ற பெயரில் சாலையில் வாகன ஓட்டுநர்களை அவ மானப்படுத்தி அதிக கட்டணங்கள் வசூல் செய்வதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாட்டில் காலாவதி ஆன சுங்கச் சாவடிகளை இழுத்து மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மாநில தழுவிய பிரச்சார இயக்கத்தை சிஐ டியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் முன்னெ டுத்துள்ளது. பள்ளிபாளையத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், சிஐ டியு மாவட்ட தலைவர் எம்.அசோகன், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் சு.சுரேஷ், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் தண்டபாணி, பொது தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சரவணவேல். விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரை யாற்றினர்.