districts

img

தாயம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா

திருப்பூர், ஜூன் 16 - திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே தாயம்பாளையம் கிராமப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமரா வில் பதிவாகியுள்ளது. ஊதியூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை  நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில் சில கால்நடைகளையும் வேட்டையாடியது. இந்த சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்து றையினர் கூண்டு வைத்து முயற்சி செய்தும், சிறுத்தை சிக்க  வில்லை. சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் விவசாயம் மற் றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் மக்கள் இந்த சிறுத் தையை பிடித்து அடர் வனத்திற்குள் விட வேண்டும் என்று  தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இந்த சிறுத்தை ஊதியூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி  இருந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பொதுவெளியில் தட் டுப்படாமல் இருந்த இந்த சிறுத்தை வியாழனன்று இரவு தாயம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோயில் அருகே நட மாடியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தாயம்பாளையம் உட்பட அதன் அருகில்  உள்ள மூன்று கிராமங்களின் கோயில்கள் பூட்டப்பட்டுள் ளன. ஊதியூர் அருகே வனப்பகுதியில் மான்கள் இருப்பதால்  இந்த சிறுத்தை அவற்றை வேட்டையாடி புதருக்குள் பதுங்கி  தப்பி வருவதாக வனத்துறையினர் விவசாயிகள் குறைதீர்க்  கூட்டத்தின் போது தெரிவித்தனர்.