districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பழங்குடியின மாணவருக்கு பாராட்டு 

நாமக்கல், நவ.12- கொல்லிமலை அரசுப் பள்ளியில் பயின்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள பழங்குடியின மாண வருக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, செம்மேடு பகுதியில் அரசு பழங்குடியினர் மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும்  இப்பள்ளியில் பயின்ற குண்டூர் நாடு ஊராட்சி, தாம் பபாடி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து சாமி-தங்கமணி தம்பதியரின் மகன் வெற்றிமுருகன், நிக ழாண்டில் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில்வதற்கு கள்ளக்குறிச்சி அரசு  மருத்துவக் கல்லூரிக்கு தோ்வாகி உள்ளார். அவருக்கு, பள்ளித் தலைமையசிரியர் எல்.ரவி, வகுப்பு  ஆசிரியர்கள் ஆகியோர் வியாழக்கிழமை அன்று பாராட்டு  விழா நடத்தினா். ஆசிரியா்கள் அனைவரும் இணைந்து மாண வருக்கு உதவித்தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கினா்.  மேலும், சேந்தமங்கலம் தொகுதி சட்டப் பேரவை உறுப் பினர் கே.பொன்னுசாமி, மாணவா் வெற்றிமுருகனுக்கு  கேடயம் வழங்கி பாராட்டினார். 

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, நவ.12- தமிழகத்தில் மழை தீவிரமடைந்து பரவலாக பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மழை பரவலாக பெய்தது.  மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வியாழ னன்று பெய்ய தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.  வெள்ளியன்று மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு 56, பெருந்துறை 54,  கோபி 32, தாளவாடி 36, சத்தியமங்கலம் 37, பவானிசாகர் 34.8,  பவானி 44.4,கொடுமுடி 67, நம்பியூர் 52,  சென்னிமலை 93,  மொடக்குறிச்சி 63, கவுந்தப்பாடி 49.20, அம்மாபேட்டை 39.4,  கொடிவேரி 45,  குண்டேரி பள்ளம் 28.6 மற்றும் வரட்டு பள்ளம்-31.6 என மாவட்டம் முழுவதும் 815.6 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக சென்னிமலை பகுதியில் 93 மில்லி மீட்டர் மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழை  காரணமாக சாலைகளில் போக்குவரத்து குறைந்து காணப் பட்டது.

சொத்து பிரச்சனை பெண் தற்கொலை

ஈரோடு, நவ. 12- சொத்து பிரச்சனை காரணமாக, கோபி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை கொண்டார். ஈரோடு கோபி ஏழுமலை தோட்டத்தைச் சேர்ந்தவர் பால முருகன். இவர் கவுந்தப்பாடி அருகே கண்ணாடி புதூரில் வசிக்கும் நடராஜன் என்பவரின் மகளான கலைச்செல்வி (33) யைக் காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில்  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது அக்கா மகேஸ்வரி சொத்து தொடர் பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடைபெற்று வருவ தாகவும், தனது அம்மாவின் நகைகள் அக்காவிடம் இருப் பதை கேட்டு வாங்கச்சொல்லியும் கலைசெல்வி அவ்வப் போது பிரச்சனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் வியாழனன்று கலைச்செல்வி சொத்து பிரச்ச னையின் காரணமாக கணவனுடன் சண்டை போட்டுள்ளார். மறுநாள் தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்தார்.  இதன்பிறகு கலைச்செல்வியின் பெற்றோர்க்குத் தகவல்  சொல்லி தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர், கலைச்செல்வி ஏற்கனவே இறந்து விட்டதாகக்  கூறிவிட்டார். இதுகுறித்து கோபி காவல் நிலையத்தில் பால முருகனின் அக்கா தன்மீது சொத்து பிரச்சனை காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு மனம் வெறுத்து தனக்குத்தானே தூக்கு மாட்டி கொண்டார் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குடிப்பழக்கத்தால் இளைஞர் தற்கொலை

கோவை, நவ.12- குடிப்பழக்கத்தை கைவிட முடியாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறு முகையை சேர்ந்தவர் சுரேந்தர் (32). கூலி தொழிலாளி. இவருக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 2  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சுரேந்தர் குடிப்பழக் கத்திற்கு அடிமையாகி உள்ளார். அவரால் குடிப்பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனை நினைத்து அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்த நிலையில்,   விரக்தியடைந்த அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.