திருப்பூர், மே 27 – திருப்பூர், காவிலிபாளை யம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத் தில் புதிதாக 25 மரக்கன்றுகள் சனியன்று நடப்பட்டது. பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.முத்துசாமி தலைமையில் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பழ வகைகள் மற் றும் நிழல் தரும் மரக்கன்று களை நட்டனர். காவிலிபாளையம் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளா கம் முழுவதும் ஏற்கெனவே ஏராளமான மரங்கள் உள்ளன. பசுஞ்சோலையாக காட்சி யளிக்கும் இந்த பள்ளி வளாகத்தில் காலி யாக இருந்த இடங்களிலும் சனியன்று மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன் மூலம் இந்த பள்ளி வளாகம் ஒரு சிறந்த சோலையாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள் ளிக்கு வரக்கூடிய ஆர்வத்தை தூண்டுவதாக இந்த இடம் இருக்கும் என்று என்.முத்துசாமி கூறினார்.