districts

img

புராணங்களை வரலாற்று உண்மையாக கட்டமைக்கப் பார்க்கிறார்கள்: திருப்பூர் புத்தகத் திருவிழாவில் கரு.பழனியப்பன் பேச்சு

 திருப்பூர், ஜன. 25 - புராணங்களை வரலாற்று உண் மையாக கட்டமைக்கப் பார்க்கி றார்கள், இதில் ஏமாற்றப்படாமல் இருக்க புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்கு னர் கரு. பழனியப்பன் கூறினார்.  திருப்பூர் வேலன் ஹோட்டல் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை  வெற்றித் தமிழர் பேரவை தலைவர்  அரிமா எம்.ஜீவானந்தம் தலைமை யில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘நயம் பட உரை’ என்ற தலைப்பில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் பேசினார். அப் போது அவர் கூறுகையில், சொல்ல  வேண்டிய கருத்தை கேட்பவர்கள்  மனம் புண்படும் என்று கருதாமல்  உண்மையை நேரடியாக சொல்வது  தான் நயம் பட உரைப்பதாகும். அப்படி  சொல்லும் பொழுது கேட்பதற்கு கடி னமாக இருந்தாலும், பிற்பாடு வாழ்க்கை அனுபவத்தில் அது சரி யாக இருப்பதை உணரலாம். தந்தை  பெரியார் அது போல் பேசியவர் ஆவார். அதனால் தான் இன்று இந் தியா முழுமைக்கும் உயர் கல்வி படிக் கும் பெண்களில் 52% பேர் தமிழ்நாட்டி னர். 1928 ஆம் ஆண்டு பெண்களுக்கு  சொத்துரிமை வேண்டும் என்று சொன்னவர் பெரியார். 1989 ஆம்  ஆண்டு தமிழ்நாட்டில் பெண்க ளுக்கு சொத்துரிமை சட்டம் கொண்டு  வரப்பட்டது. அதற்குப் பிறகுதான் இந்தியாவில் பெண்களுக்கான சொத்துரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று பிராண இதிகாசங்களை வரலாறாக கட்டமைக்க பார்க்கின்றனர். புத்தகங்களைப் படிப்பதன் மூலம் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும். மனிதகுலம் தலை நிமிர்வதற்கு புத்தகங்கள் உதவியாக இருக்கின்றன. இன்று செல்போன் கலாச்சாரத்தில் அனை வரும் தலைகுனிந்து இருக்கி றார்கள். அதிலிருந்து விடுபட்டு தலை  நிமிர்ந்து நிற்க புத்தகங்கள் வாசிப்பு அவசியமாகும். குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பை கொண்டு செல்வதன் மூலம் தலை நிமிர்ந்த சமூகத்தை உருவாக்க முடி யும் என்று அவர் கூறினார். இந்நிகழ்வில் திருப்பூர் ஏற்றுமதி யாளர் சங்க கௌரவத் தலைவர் ஏ. சக்திவேல், சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த்,  திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர்  கே.பி.கே. செல்வராஜ் ஆகியோர் புத் தக கண்காட்சியை வாழ்த்தி பேசி னர்.  முன்னதாக பாரதி புத்தகாலயம்  க.நாகராஜன் வரவேற்றார். சைமா  முன்னாள் பொதுச் செயலாளர்  எம்பரர் வி. பொன்னுசாமி திருப்பூர்  ஏற்றுமதி அவர்கள் சங்க பொதுச்  செயலாளர் என்.திருக்குமரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்த கருத்தரங்கில் பெருந்திர ளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு முன்பாக பள்ளி குழந் தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற் றது. முடிவில் யுனிவர்சல் பள்ளிக்  குழுமத்தின் தாளாளர் வினோதரணி நன்றி கூறினார்.