districts

img

கடம்பூர்: ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் பரபரப்பு

ஈரோடு, மே 24- கடம்பூர் வனப்பகுதியில் இருந்து  ஊருக் குள் புகுந்த ஒற்றை யானையை பட்டாசு வெடித்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனப்பகுதியில் யானை கள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், காட் டெருமைகள், மான்கள் உள்பட ஏராளமான  வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில், யானைகள் அடிக்கடி வனப்பகுதி இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின் றன. இதேபோல் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடுவில் நின்று வாகன ஓட்டி களை சில சமயம் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், கடம்பூர் வனப்பகுதி யில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண்  யானை மூலக்கடம்பூர், ஏரியூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து, அங்குள்ள விளை நிலங் களை சேதப்படுத்தியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து  வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை யடுத்து வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று யானையை வனப்ப குதிக்கு விரட்டுவதற்காக பட்டாசு வெடித்த னர். ஆனாலும், சுமார் 3 மணி நேரமாக வனத் திற்கு செல்லாமல் சுற்றிதிரிந்த ஒற்றை ஆண் யானை, சிறிதுநேரம் கழித்து வனப் பகுதிக்குள் சென்றது.