districts

img

சிபிஎம் கோபி தாலுகாச் செயலாளராக க.பெருமாள் தேர்வு

ஈரோடு, நவ.10- மார்க்சிஸ்ட் கட்சியின் கோபிசெட்டிபாளையம் தாலு காச் செயலாளராக க.பெரு மாள் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தாலுகா 11 ஆவது மாநாடு, ராம்  நகரில் தோழர் என்.சங்கரய்யா  நினைவரங்கில் ஞாயிறன்று நடைபெற்றது. மூத்த தோழர் வி.ஆர்.மாணிக் கம் செங்கொடியை ஏற்றி வைத்தார். கிருஷ் ணவேணி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். வி.சி.நந்தகுமார் வரவேற்றார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.சுப்ரமணியன்  மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். தாலுகாச் செயலாளர் ஜி.ஏ.துரைசாமி  அறிக்கையை முன்வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி வாழ்த்திப்  பேசினார். இம்மாநாட்டில், அம்மாபாளையத் தில் பவானியாற்றின் குறுக்கே  பாலம் அமைக்க வேண்டும்.  வீட்டுமனை இல்லாதவர்க ளுக்கு உடனடியாக பட்டா  வழங்கி, தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். கோபி, நம்பியூர்  அரசு மருத்துவமனைகள் 24  மணி நேரமும் செயல்படும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண் டும். காவிலிபாளையம், காராப் பாடி, வரப்பாளையம் ஆகிய  ஊராட்சிகளை நம்பியூர் ஒன்றியத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து, கட்சியின் கோபி செட்டிபாளையம் தாலுகாச் செயலாளராக க.பெருமாள் மற்றும் 9 தாலுகாக்குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச்  செயலாளர் ஆர்.ரகுராமன் நிறைவுரையாற்றி னார். முடிவில், தனசிங் நன்றி கூறினார்.