ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அரசுக்கு முன்வைத்திருக்கும் கோரிக்கைகளை தயாரித்துள்ளனர், இக்கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து இக் கோரிக்கை சாசனத்தை வழங்கி வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து அளித்தனர். இதில், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.