districts

img

குடியிருப்புப் பகுதியில் எரிவாயு மையம் அமைப்பதா?

சேலம், ஜூன் 18- சங்ககிரி அருகே பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே எரிவாயு மையம் அமைக் கும் முடிவை கண்டித்து, ஜூன் 28 ஆம் தேதி யன்று போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், மஞ் சக்கல்பட்டி கிராமம், வரதகாட்டானூரில் புல.எண் 162/2E-1ல் எரிவாயு பிரித்து அனுப்பும்  வால்வு மையம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான அமைதி பேச்சுவார்த்தை சங்ககிரி வட்டாட்சி யர் தலைமையில் நடைபெற்றது. அதில் மேற் படி இடத்தில் மையம் அமைத்தால், அப்பகுதி யில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட குடியி ருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக் கப்படுவார்கள். பொதுமக்களை பாதிக்கா மல் வேறொரு பகுதியில் இத்திட்டத்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலி யுறுத்தினர். ஆனால், அதை வட்டாட்சியர் ஏற்கவில்லை. இந்நிலையில், இத்திட்டத் தால் பாதிக்கப்படும் விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராம மூர்த்தி, சங்ககிரி வட்டத்தலைவர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இக்கூட்டத்தில், குடியி ருப்புகள் இல்லாத பகுதியில் எரிவாயு மையம் அமைக்க வலியுறுத்தி ஜூன் 28 ஆம் தேதி யன்று சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடு வது என முடிவு செய்யப்பட்டது.