கோ.பாலச்சந்திரன் பேச்சு திருப்பூர், ஜன.27- அரசியலோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் பேசா மல் இருக்க முடியாது. நமது மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட, ஆறு முதல் பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் பாடத்தை சொல்லித் தந்திருக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ. பாலச்சந்திரன் கூறினார். திருப்பூரில் 21 ஆவது புத்தகத் திரு விழா நடைபெற்று வருகிறது. இதில், ஞாயிறன்று நடைபெற்ற சிந்தனை அரங் கத்தில், ‘நாமிருக்கும் நாடு நமதென்ப தறிவோம்’ என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ.பாலச் சந்திரன் பேசினார். அவர் பேசுகையில், இங்கே எதைப் பற்றி பேசக்கூடாது என்று முன்கூட்டியே சொன்னார்கள். அரசியலோடு தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சங்க காலத்தைப் பற்றி பேசுவதும் அரசியல் தான், சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிப் பேசுவதும் அரசியல் தான், சுதந் திரப் போராட்டத்தை பேசுவதும் அரசி யல் தான், ஜனநாயகத்தில் பல கட்சிகள் ஆட்சிக்கு வந்ததை பேசுவதும் அரசி யல் தான். ஆகவே அரசியல் பேசாமல் இருக்க முடியாது. எதை பேசக்கூடாது என்றால், அநாகரிகம் பேசக்கூடாது, அரசியல் நாகரிகம் பேச வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்னால், நாமிருக்கும் நாடு நமது எனபதறிந் தோம், இது நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் என்று முண்டாசுக் கவிஞர் பாரதியார் பேசினார். ஆனால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக் குப் பின்னர் நாமிருக்கும் நாடு நமதென் பதறிவோம் என்று சொல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்குக் கார ணம் என்னவென்றால் கல்வியறிவு, வேலைவாய்ப்புகளில் பல முன்னேற் றங்களைக் கொண்டுவந்த பல அரசு களும், மக்களுக்குத் தேவையான அர சியல் விழிப்புணர்வைக் கொண்டு வர வில்லை. நமது அரசியலமைப்புச் சட் டம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்க வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் அரசி யல் அமைப்புச் சட்டம் கற்றுத் தந்தி ருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் நமது குழந்தைகளுக்கு கற்றுத் தந்திருக்க வேண்டும். அரசை மட்டும் குறை சொல்லாமல் நாட்டுக்கு நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்பதுதான் முன்னேற்றமான நாகரீக்கத்துக்கு முதல்படியாகும், என்றார். இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், வனத்துக்குள் திருப்பூர், வெற்றி அறக் கட்டளை நிர்வாகி டி.ஆர்.சிவராம், டி.கே.டி கல்விக் குழுமங்களின் தாளா ளர் ஷகிலா பர்வீன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆர்.சுரேஷ், சுப்ரீம் பாரடைஸ் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், பெப்சி பாலு, ராசி கே.சிதம்பரம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.